200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற அதீத நம்பிக்கை: சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சரிந்த பின்னணி என்ன?

200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற அதீத நம்பிக்கை: சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சரிந்த பின்னணி என்ன?
Updated on
2 min read

சென்னை: சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் 200 தொகு​தி​களில் வெற்றி பெற்று மீண்​டும் ஆட்​சி​யமைப்​போம் என்று மார்​தட்​டிய திமுக, படு​தோல்​வியை சந்​தித்​துள்​ளது. பதவி​யேற்பு முன்​னேற்​பாடு​கள், அடுத்த அமைச்​சரவை பட்​டியல் என எக்​கச்​சக்க எதிர்​பார்ப்​பு​களு​டன் காத்​திருந்த அறி​வால​யம் தற்​போது மயான அமை​தி​யில் ஆழ்ந்​துள்​ளது.

கார்ப்​பரேட் குழு​வான பென் டீம், உளவுத் துறையை முழு​மை​யாக நம்​பிய திமுக தலை​மை, எல்​லாம் சரி​யாக போய்க் கொண்​டிருக்​கிறது. 2024 நாடாளு​மன்​றத் தேர்​தல் முடிவு​களே இப்​போதும் வரும் என்ற அதீத நம்​பிக்​கை​யில் மாட்​டிக் கொண்​டது​தான் முதல் சறுக்​கல்.

களத்​தில் ஆட்​சிக்கு எதி​ரான எதிர்ப்​பலை வீசுவதை அவர்​கள் முழு​மை​யாக உணர​வில்​லை. எதிர்க்​கட்​சிகள் சிதறிக் கிடக்​கின்​றன, நமக்கு லாபம்​தான் என கணக்கு போட்​டனர். ஆனால், தேர்​தலில் திமுகவுக்கு எதி​ராக பதி​வான சுமார் 60 சதவீத வாக்​கு​கள், மக்​களின் கோபத்தை அப்​பட்​ட​மாகக் காட்​டி​யிருக்​கிறது.

தவெகவை குறைத்து மதிப்​பீடு

அது வெறும் ரசிகர் கூட்​டம், வாக்​கு​களாக மாறாது என விஜய்​யின் தவெகவை திமுக முன்​னணி தலை​வர்​கள் தொடர்ந்து கிண்​டல் செய்​ததும், குறைத்து மதிப்​பிட்​டதும் மிகப்​பெரிய வரலாற்​றுப் பிழை. இளைஞர்​கள், பெண்​கள் மத்​தி​யில் தவெக ஏற்​படுத்​திய அமை​திப் புரட்​சியை கணிக்க வியூ​கக் குழுக்​களும், உளவுத்​துறை​யும் கோட்​டை​விட்​டு​விட்​டன.

கைகொடுக்​காத மெகா கூட்​டணி

எங்​கள் கூட்​ட​ணி​யில் 20-க்​கும் மேற்​பட்ட கட்​சிகள் இருக்​கின்​றன. இந்​தக் கூட்​ட​ணிக் கணக்கே எங்​களைக் கரையேற்​றும் என நம்​பி​னார் ஸ்டா​லின். ஆனால், அந்த கணக்கு காகிதத்​தில் இருந்​ததே தவிர, களத்​தில் வேலை செய்​ய​வில்​லை.

திமுக தனது வழக்​க​மான 24 சதவீத வாக்​கு​களை மட்​டுமே பெற்​றுள்​ளது. தேமு​திக, காங்​கிரஸ், விசிக போன்ற கூட்​டணி கட்​சிகள் வாக்​கு​கள் திமுக​வுக்கு முழு​மை​யாக டிரான்​ஸ்​பர் ஆகவில்​லை.

கார்ப்​பரேட் ஆதிக்​கம்

திமுக​வின் மிகப்​பெரிய பலமே அதன் நிர்​வாக கட்​டமைப்​பு​தான். ஆனால், 2021 தேர்​தலில் ஆட்​சிக்கு எதி​ரான அலை​யில் பெற்ற வெற்​றியை ஐபேக் நிறுவன உதவி​யுடன் வென்​ற​தாக நம்​பியதே திமுக​வின் தவறாகும்.

அதன் தாக்​க​மாக உரு​வாக்​கப்​பட்ட கார்ப்​பரேட் குழு​வான பென் டீம்மை முழு​மை​யாக நம்பி திமுக தலைமை செயல்​பட்​டது. ஆட்சி நிர்​வாகம் தொடங்கி தேர்​தல் வேட்​பாளர் வரை அனைத்து பணி​களி​லும் அதன் தலை​யீடு இருந்​தது.

அவர்​கள் கொடுத்த தரவு​களை வைத்​துக்​கொண்டு தேர்​தல் பணி​களை செய்​தது. இதனால் காலங்​கால​மாக உழைத்த உடன்​ பிறப்​பு​களின் கருத்​துகளுக்கு அங்கே மதிப்​பில்​லாமல் போனது.

மேலும், திமுக​வின் தோல்விக்கு அமைச்​சர்​கள் மற்​றும் மாவட்​டச் செய​லா​ளர்​களின் ‘பெரியண்​ணன்’ மனப்​பான்​மை​யும் முக்​கியக் காரண​மாக கூறப்​படு​கிறது. ‘எங்​களை மீறி மாவட்​டத்​தில் எது​வும் நடக்​காது” என்ற ரீதி​யில் அவர்​கள் செயல்​பட்ட விதம் பொது​மக்​களிடம் கடும் அதிருப்​தியை சம்​பா​தித்​தது.

சொதப்​பலான வேட்​பாளர் தேர்வு

பென் டீம் ரிப்​போர்ட் மற்​றும் குடும்ப உறவு​களின் ஆதிக்​கத்​தால் வேட்​பாளர்​களைத் தேர்வு செய்​த​தில் பல்​வேறு இடங்​களில் திமுக தலைமை கோட்​டை​விட்​டது. துரை​முரு​கன் தொடங்கி பல்​வேறு சீனியர்​களுக்கு மீண்​டும் வாய்ப்பு வழங்​கியது கட்​சிக்​குள் அதிருப்​தி​யானது.

சிட்​டிங் எம்​எல்​ஏக்​கள் 31 பேருக்​கும், 2 அமைச்​சருக்​கும் மீண்​டும் சீட் தரப்​பட​வில்​லை. இவர்​களில் பலர் வெளிப்​படை​யாகவே உள்​ளடி வேலைகளில் ஈடு​பட்​டனர்.

காலை உணவுத் திட்​டம் உட்பட பல்​வேறு நலத்​திட்​டங்​களை அரசு கொண்டு வந்​தும், அதை மக்​களிடம் கொண்​டுசேர்க்க திமுக தவற​விட்​டது.

சுமார் ரூ.600 கோடி​யில் பல திட்​டங்​களை மேற்​கொண்​டும் கொளத்​தூரில் முதல்​வர் ஸ்டா​லின் தோற்​றதே அதற்கு சான்​றாகும். ரூ.1,000 உரிமைத் தொகை, இலவச பேருந்​துப் பயணம் என பல்​வேறு நலத்​திட்​டங்​களை மகளிருக்​காக அரசு கொண்​டு​வந்​தா​லும், அவை வாக்​கு​களாக மாற​வில்​லை.

காரணம், சட்​டம் - ஒழுங்கு பிரச்​னை​கள். குறிப்​பாக, அதி​கரித்த போதைப்​பொருட்​கள் நடமாட்​டம் மற்​றும் மகளிருக்கு எதி​ரான தொடர் குற்​றச் சம்​பவங்​கள் பெண்​களிடம் அதிருப்​தியை ஏற்​படுத்​தின.

உடன்​பிறப்​பு​களின் வியர்​வையை நம்​பிய வரை திமுக அசைக்க முடி​யாத சக்​தி​யாக இருந்​தது. எப்​போது கார்ப்​பரேட் கம்​பெனிகள் தரவு​களை நம்​பத் தொடங்​கியதோ, அன்றே அஸ்​தி​வாரம் ஆட்​டம் காணத் தொடங்​கி​விட்​டது. இந்த தேர்​தல் முடிவு​கள் முதல்​வர் ஸ்டா​லினுக்கு மட்​டுமல்ல, ஒட்​டுமொத்த திமுக​வுக்​கும் சுயப்​பரிசோதனை செய்து கொள்​வதற்​கான ஒரு மாபெரும் எச்​சரிக்கை மணி​யாகும்.

200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற அதீத நம்பிக்கை: சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சரிந்த பின்னணி என்ன?
ஃபீனிக்ஸ் பறவை போல் அதிமுக மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும்: பழனிசாமி நம்பிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in