டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு அதிகரிப்பு

டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு அதிகரிப்பு
Updated on
1 min read

மேட்டூர்: காவிரி டெல்டா பாசனத்​துக்​காக மேட்​டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12-ம் தேதி முதல் தண்ணீர் திறக்​கப்​பட்டு வரு​கிறது. தற்​போது, டெல்டா பாசனத்​துக்​கான நீர் தேவை அதி​கரித்​துள்​ளது.

இதையடுத்​து, மேட்​டூர் அணை​யில் ஏற்​கெனவே விநாடிக்கு 3,000 கனஅடிதண்​ணீர் திறக்​கப்​பட்டு வந்த நிலை​யில், நேற்று காலை 11 மணிக்கு 6,000 கனஅடி​யாக நீர்திறப்பு அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது. கால்​வாய் பாசனத்​துக்கு 400 கனஅடி தண்​ணீர் திறக்​கப்​படு​கிறது.

இதனிடையே, மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து நேற்று முன்​தினம் விநாடிக்கு 3,981 கனஅடி​யாக இருந்த நிலை​யில் நேற்று 3,459 கனஅடி​யாக குறைந்​தது. நீர்​மட்​டம் 116.22 அடி​, நீர் இருப்பு 87.56 டிஎம்​சி​யாக​ இருந்​தது.

டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு அதிகரிப்பு
தமிழகம் முழுவதும் நாளை நடைபெற இருந்த டிட்டோ ஜாக் வேலைநிறுத்த போராட்டம் தள்ளிவைப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in