

ஒகேனக்கல் அருவி. (கோப்பு படம்)
தருமபுரி / மேட்டூர்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 1,200 கனஅடியாக உயர்ந்தது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் கடந்த 13-ம் தேதி காலை விநாடிக்கு 300 கனஅடியாகப் பதிவான நீர்வரத்து 14-ம் தேதி காலை 200 கனஅடியாகக் குறைந்தது.
அன்று முதல் நேற்று முன்தினம் மாலை வரை 200 கனஅடியாகவே நீடித்த நீர்வரத்து, நேற்று காலை 1,200 கனஅடியாக உயர்ந்தது.
மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 50 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 72 கனஅடியாக அதிகரித்தது.அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 2,500 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
தண்ணீர் திறப்பைவிட, நீர்வரத்து குறைவாக உள்ளதால் நீர்மட்டம் சரிந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 89.87 அடியிலிருந்து 89.66 அடியாகவும், நீர் இருப்பு 52.50 டிஎம்சியிலிருந்து 52.27 டிஎம்சியாகவும் குறைந்துள்ளது.