தமிழகம் முழுவதும் உள்ள 62 மையங்களிலும் மே 4 காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை

8.15 லட்சம் தபால் வாக்கு முதலில் எண்ணப்படும் என தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிப்பு
சென்னை ராணி மேரி கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு, சீலிடப்பட்டுள்ள அறைக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய வீரர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். (கோப்புப் படம்)

சென்னை ராணி மேரி கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு, சீலிடப்பட்டுள்ள அறைக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய வீரர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். (கோப்புப் படம்)

Updated on
2 min read

சென்னை: தமிழகம் முழு​வதும் உள்ள 62 வாக்கு எண்​ணும் மையங்​களில் வாக்கு எண்​ணும் பணி மே 4-ம் தேதி காலை 8 மணிக்​குத் தொடங்​கும். தபால் வாக்​கு​கள் எண்ணி முடிக்​கப்​பட்ட பிறகே, மின்​னணு இயந்​திரங்​களில் இறுதி சுற்று வாக்கு எண்​ணிக்கை தொடங்​கும். இத்​தேர்​தலில் மொத்​தம் 8.15 லட்​சம் பேர் தபால் வாக்கு செலுத்​தி​யுள்​ளனர் என்று தலை​மைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் தெரி​வித்​துள்​ளார்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் 234 தொகு​தி​களி​லும் ஒரே கட்​ட​மாக கடந்த 23-ம் தேதி நடை​பெற்​றது. அரசி​யல் கட்சி வேட்​பாளர்​கள், சுயேச்​சைகள் என மொத்​தம் 4,023 வேட்​பாளர்​கள் போட்​டி​யிட்​டுள்​ளனர். 5.73 கோடி பேர் வாக்​களிக்​கத் தகுதி பெற்​றிருந்த நிலை​யில், 4.88 கோடி வாக்​காளர்​கள் (85.10 சதவீதம்) வாக்​களித்​தனர்.

தமிழக தேர்​தல் வரலாற்​றில் கடந்த 2011 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பதி​வான 78 சதவீத வாக்​குப்​ப​திவு​தான் அதி​கபட்​ச​மாக இருந்​தது. இந்த நிலை​யில், சிறப்பு தீவிர திருத்த (எஸ்​ஐஆர்) பணி​யின்​போது, உயி​ரிழந்​தவர்​கள், முகவரி மாறிய​வர்​கள், இரட்​டைப் பதிவு உள்​ளவர்​களின் பெயர்​கள் வாக்​காளர் பட்​டியலில் இருந்து நீக்​கப்​பட்​டதை தொடர்ந்​து, தமிழகத்​தில் வாக்​குப்​ப​திவு 85 சதவீதத்தை தாண்டி சாதனை படைத்​தது.

அதி​கபட்​ச​மாக கரூரில் 93.41 சதவீத​மும், வீர​பாண்​டி​யில் 93.36 சதவீத​மும் வாக்​கு​கள் பதி​வாகின. 45 தொகு​தி​களில் 90 சதவீதத்​துக்கு மேல், 151 தொகு​தி​களில் 80 சதவீதத்​துக்கு மேல், 37 தொகு​தி​களில் 70 சதவீதத்​துக்கு மேல் வாக்​கு​கள் பதி​வாகி​யுள்​ளன. பாளை​யங்​கோட்டை தொகு​தி​யில் மட்​டுமே வாக்​குப்​ப​திவு 70 சதவீதத்​தை​விட குறை​வாக (68.97 சதவீதம்) பதி​வானது.

இத்​தேர்​தலில் 75,064 வாக்​குச்​சாவடிகளில் 1.06 லட்​சம் வாக்​குப்​பதிவு இயந்​திரங்​கள், தலா 75,064 கட்​டுப்​பாட்டு இயந்​திரங்​கள் மற்​றும் விவி​பாட் இயந்​திரங்​கள் பயன்​படுத்​தப்​பட்​டன. 23-ம் தேதி மாலை 6 மணிக்கு வாக்​குப்​ப​திவு முடிந்​ததும், மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் அனைத்​தும் சீலிடப்​பட்​டு, தமிழகம் முழு​வதும் வாக்கு எண்​ணிக்கை நடை​பெற உள்ள 62 மையங்​களில் பாது​காப்​பாக வைக்​கப்​பட்​டுள்​ளன.

இங்கு 4 அடுக்கு போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டுள்​ளது. தேர்​தல் நடத்​தும் அலு​வலர்​கள் தின​மும் 2 முறை​யும், மாவட்​டத் தேர்​தல் அதி​காரி​கள் ஒரு​முறை​யும் நேரில் பார்​வை​யிட வேண்​டும் என தேர்​தல் ஆணை​யம் உத்​தர​விட்​டுள்​ளது. சிசிடிவி மூல​மாக​வும் பாது​காப்பு அறை​கள்24 மணி நேர​மும் தொடர்ந்து கண்​காணிக்​கப்​படு​கின்​றன. சென்​னை​யில் உள்ள தலை​மைத் தேர்​தல் அதி​காரி அலு​வல​கத்​தில் இருந்​தும் கேமரா காட்​சிப் பதிவு​கள் தொடர்ந்து கண்​காணிக்​கப்​பட்டு வரு​கின்றன.

இந்​நிலை​யில், மே 4-ம் தேதி நடை​பெற உள்ள வாக்கு எண்​ணும் பணி தொடர்​பாக தமிழக தலை​மைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்ட மொத்​தம் 3.60 லட்​சம் அலு​வலர்​களில், வாக்​காளர்​களாக பதிவு செய்​து, வாக்​களிக்க விண்​ணப்​பித்த 2.88 லட்​சம் அலு​வலர்​கள் (80%) தபால் வாக்​கு​களைப் பதிவு செய்​துள்​ளனர்.

தேர்​தல் பணிக்​காக நியமிக்​கப்​பட்ட காவல் துறை சார்ந்த அலு​வலர்​கள், மற்ற தேர்​தல் பிரிவு​களில் பணிபுரிந்த அலு​வலர்​கள், தேர்​தல் கண்​காணிப்பு குழுக்​களில் பணி​யாற்​றிய அலு​வலர்​களும் சேர்த்து மொத்​தம் 3.36 லட்​சம் பேர் தபால் வாக்​கு​களாக​வும், 1.10 லட்​சம் அலு​வலர்​கள் தேர்​தல் பணி சான்​றிதழ் பெற்று நேரடி​யாக வாக்​குச்​சாவடி​யிலும் வாக்​களித்​துள்​ளனர்.

படிவம் 12-டி விண்​ணப்​பத்​தின் அடிப்​படை​யில், மாற்​றுத் திற​னாளி​கள், 85 வயதுக்கு மேற்​பட்ட முதி​ய​வர்​கள் என மொத்​தம் 1.73 லட்​சம் வாக்​காளர்​கள் தபால் வாக்கு பெற்று வாக்​களித்​துள்​ளனர். இதுத​விர, ராணுவத்​தினர், பாது​காப்பு படை​யினர் உள்​ளிட்ட சேவைத் துறை​யில் உள்ள 18 ஆயிரம் பேர் வாக்​களித்​துள்​ளனர். இவர்​களது தபால் வாக்​கு​கள் மே 4-ம் தேதி காலை 8 மணி வரை பெறப்​படும். அந்த வகை​யில், மொத்​தம் 8.15 லட்​சம் பேர் தபால் வாக்​கு​களை பதிவு செய்​துள்​ளனர்.

இந்​நிலை​யில், வாக்கு எண்​ணும் பணி மே 4-ம் தேதி, மாநிலம் முழு​வதும் உள்ள 62 வாக்கு எண்​ணும் மையங்​களில் சரி​யாக காலை 8 மணிக்கு தொடங்​கும்.

ஒவ்​வொரு மையத்​தி​லும் ஒரு பகு​தி​யில் தபால் வாக்​கு​களும், மற்​றொரு பகு​தி​யில், வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​களில் பதி​வான வாக்​கு​களும் அதற்​குரிய மேஜைகளில் எண்​ணப்​படும். இதை மேற்​பார்​வை​யிட உதவி தேர்​தல் நடத்​தும் அலு​வலர் நிலை​யில் அதி​காரி​கள் தனித்​தனியே நியமிக்​கப்​படு​வார்​கள். ஒரு மேஜைக்கு 500 வாக்​கு​கள் என்ற விகிதத்​தில் தபால் வாக்​கு​கள் எண்​ணப்​படும்.

முதலில் காலை 8 மணிக்கு தபால் வாக்​கு​கள் எண்​ணும் பணி தொடங்​கும். மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​களில் பதி​வான வாக்​கு​கள் எண்​ணும் பணி காலை 8.30 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடை​பெறும். எனினும், இதன் கடைசி சுற்​று வாக்​கு எண்​ணும்​ பணி, தபால்​ வாக்​கு​கள்​ எண்​ணி முடிக்​கப்​பட்​ட பிறகு​தான்​ தொடங்​கும்​. இவ்​வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p>சென்னை ராணி மேரி கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு, சீலிடப்பட்டுள்ள அறைக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய வீரர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். (கோப்புப் படம்)</p></div>
ஆந்திராவில் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு: திருமலையில் பக்தர்கள் பாதிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in