தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை

தமிழகத்தில் பாதுகாப்புக்கு 1 லட்சம் போலீஸார் குவிப்பு
சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுவதையொட்டி, திருச்சி டிவிஎஸ் டோல்கேட் சுப்பிரமணியபுரம் பகுதியில் நேற்று பாதுகாப்பு ஒத்திகையில்  ஈடுபட்ட போலீஸார். படம்: ர.செல்வமுத்துகுமார்

சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுவதையொட்டி, திருச்சி டிவிஎஸ் டோல்கேட் சுப்பிரமணியபுரம் பகுதியில் நேற்று பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்ட போலீஸார். படம்: ர.செல்வமுத்துகுமார்

Updated on
2 min read

சென்னை: தமிழகம், புதுச்​சேரி உள்​ளிட்ட 5 மாநில சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வாக்கு எண்​ணிக்கை நாளை நடை​பெறுகிறது. தமிழகத்​தில் பாது​காப்​புக்கு 1 லட்​சம் போலீ​ஸார் குவிக்​கப்​பட்​டுள்​ளனர்.

தமிழகம் உள்​ளிட்ட 5 மாநில சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​கான அறி​விப்பை தேர்​தல் ஆணை​யம் கடந்த மார்ச் 15-ம் தேதி வெளி​யிட்​டது. அதன்​படி, புதுச்​சேரி, கேரளா, அசாமில் கடந்த ஏப்​.9-ம் தேதி​யும், தமிழகத்​தில் கடந்த ஏப்​.23-ம் தேதி​யும் ஒரே கட்​ட​மாக வாக்​குப்​ப​திவு நடந்​தது. மேற்கு வங்​கத்​தில் ஏப்​.23, 29 ஆகிய தேதி​களி்ல் 2 கட்​ட​மாக நடை​பெற்​றது. அங்கு 2-ம் கட்ட தேர்​தலில் முறை​கேடு புகார்​கள் எழுந்​த​தால், 15 வாக்​குச்​சாவடிகளில் நேற்று மறு வாக்​குப்​ப​திவு நடத்​தப்​பட்​டது.

இதே​போல, கோவா, குஜ​ராத், கர்​நாட​கா, மகா​ராஷ்டி​ரா, நாகாலாந்து, திரிபுரா ஆகிய 6 மாநிலங்​களில் காலி​யாக உள்ள பேர​வைத் தொகு​தி​களுக்கு ஏப்​.9, 23 ஆகிய தேதி​களில் இடைத் தேர்​தல் நடத்தப்​பட்​டுள்​ளது. தமிழகத்​தைப் பொருத்​தவரை, மொத்​தம் 4,023 வேட்​பாளர்​கள் போட்​டி​யிட்​டுள்​ளனர். 5.73 கோடி வாக்காளர்களில் 4.88 கோடி பேர் வாக்களித்தனர். இதன்மூலம் 85.10 சதவீத வாக்குப்பதிவு நடந்து, சாதனை படைக்கப்பட்டுள்ளது.

கடந்த 23-ம் தேதி மாலை 6 மணிக்கு வாக்​குப்​ப​திவு முடிந்​ததும், மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் அனைத்​தும் சீலிடப்​பட்​டு, தமிழகம் முழு​வதும் வாக்கு எண்​ணிக்கை நடை​பெற உள்ள 62 மையங்​களில் பாது​காப்பு அறை​களில் (‘ஸ்​டி​ராங் ரூம்’) வைக்​கப்​பட்​டுள்​ளன. இங்கு 4 அடுக்கு போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், 5 மாநில சட்​டப்​பேர​வைத் தேர்​தல் மற்​றும் இடைத் தேர்​தல் வாக்கு எண்​ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்​கு​கிறது. இதற்​கான பாது​காப்பு ஏற்​பாடு​கள் தொடர்​பாக 5 மாநில தலை​மைத் தேர்​தல் அதி​காரி​களு​டன் தலைமை தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ்கு​மார் நேற்று இணைய வழி​யில் ஆலோ​சனை நடத்​தி​னார்.

தமிழகத்​தில் செய்​யப்​பட்​டுள்ள பாது​காப்பு ஏற்​பாடு​கள் குறித்து மாநில தலை​மைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் விளக்​கி​னார். ‘‘தமிழகத்​தில் 62 மையங்​களில் 65 கம்​பெனி துணை ராணுவப் படை​யினர் பாது​காப்பு பணி​யில் ஈடுபட உள்​ளனர். 18 ஆயிரம் போலீ​ஸாரும் பாது​காப்பு பணி​யில் ஈடு​படுத்​தப்பட உள்​ளனர். மாநிலம் முழு​வதும் சட்​டம் - ஒழுங்​கைப் பாது​காக்க சுமார் 1 லட்​சம் போலீ​ஸார் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளனர். தொகு​திக்கு ஒரு வாக்கு எண்​ணிக்கை பார்​வை​யாளர் என 234 பார்​வை​யாளர்​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்’’ என்று அவர் தெரி​வித்​தார்.

முழு அமை​தி, பாது​காப்பை உறுதி செய்​யும் வகை​யில், தமிழகம் முழு​வதும் நாளை மதுக்​கடைகளை மூட​வும் அவர் உத்​தர​விட்​டுள்​ளார். தமிழகத்​தில் வாக்கு எண்​ணிக்கை நடை​பெறும் 62 மையங்​களில் செய்​யப்​பட்​டுள்ள பாது​காப்பு ஏற்​பாடு​கள், குடிநீர், கழி​வறை, ஒளி, ஒலி வசதிகள், மின் இணைப்பு தொடர்​பாக மாவட்ட தேர்​தல் அலு​வலர்​கள், தேர்​தல் நடத்தும் அலு​வலர்​கள் நேற்று ஆய்வு செய்​தனர்.

மேற்கு வங்​கத்​தில் வாக்கு எண்​ணிக்கை பாது​காப்​பாக, அமை​தி​யாக, வெளிப்​படை​யான சூழலில் நடை​பெறு​வதை உறுதி செய்ய 165 கூடு​தல் வாக்கு எண்​ணிக்கை பார்​வை​யாளர்​கள், 77 காவல் பார்​வை​யாளர்​களை தேர்​தல் ஆணை​யம் நியமித்​துள்​ளது. தமிழகத்​துக்கு அவ்​வாறு நியமிக்​கப்​பட​வில்​லை என தலை​மைத்​ தேர்​தல்​ அதி​காரி அலு​வல​கம்​ தெரிவித்​துள்​ளது.

<div class="paragraphs"><p>சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுவதையொட்டி, திருச்சி டிவிஎஸ் டோல்கேட் சுப்பிரமணியபுரம் பகுதியில் நேற்று பாதுகாப்பு ஒத்திகையில்  ஈடுபட்ட போலீஸார். படம்: ர.செல்வமுத்துகுமார்</p></div>
பிளஸ் 2 முடித்த மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்ட திமுக சார்பில் உதவி மையம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in