விநாயகர் சதுர்த்தி: அனுமதி இல்லாத நீர்நிலைகளில் சிலைகளை கரைக்க கூடாது - வழிகாட்டுதல்கள் வெளியீடு

விநாயகர் சதுர்த்தி: அனுமதி இல்லாத நீர்நிலைகளில் சிலைகளை கரைக்க கூடாது - வழிகாட்டுதல்கள் வெளியீடு
Updated on
1 min read

சென்னை: ​வி​நாயகர் சதுர்த்தி கொண்​டாட்​டத்​தின்​போது அனு​மதி இல்​லாத நீர்​நிலை​களில் விநாயகர் சிலை​களை கரைக்​கக் கூடாது என தமிழ்​நாடு மாசு கட்​டுப்​பாட்டு வாரி​யம் வழி​காட்​டு​தல்​களை வெளி​யிட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: விநாயகர் சதுர்த்தி வரும் 14-ம் தேதி கொண்​டாடப்​படு​கிறது. இதை​யொட்டி கொண்​டாட்​டத்​தின் ஒரு பகு​தி​யாக விநாயகர் சிலை​களை நீர்​நிலை​களில் கரைப்​ப​தற்​காக மத்​திய மாசு கட்​டுப்​பாட்டு வாரி​யத்​தின் வழி​காட்​டு​தல்​களின்​படி, நடை​முறை​களை பொது​மக்​கள் பின்​பற்ற வேண்​டும்.

www.tnpcb.gov.in என்ற இணை​யதளத்​தில் வழி​காட்​டு​தல்​கள் இடம்​பெற்​றுள்​ளன. அதன்​படி, பிளாஸ்​டர் ஆஃப் பாரிஸ், பிளாஸ்​டிக் மற்​றும் தெர்​மோகோல் கலவையற்ற மூலப்​பொருட்​களாலும், களி மண்​ணாலும் செய்​யப்​பட்ட விநாயகர் சிலை​களை மட்​டுமே நீர்​நிலை​களில் கரைக்க அனு​ம​திக்​கப்​படும்.

வைக்​கோல், உலர்ந்த மலர் கூறுகள் போன்ற சுற்​றுச்​சூழலுக்கு உகந்த பொருட்​களை சிலை தயா​ரிக்​க​வும், சிலை ஆபரணங்​களுக்​கும், பந்​தல்​களை அலங்​கரிக்​க​வும் பயன்​படுத்​தலாம். ஒரு​முறை பயன்​படுத்​தும் பிளாஸ்​டிக், தெர்​மோகோல் பொருட்​களை பயன்​படுத்​தக்​கூ​டாது. சிலை​களை பளபளப்​பாக மாற்​று​வதற்கு மரங்​களின் இயற்கை பிசின்​களை பயன்​படுத்​தலாம். வர்​ணம் பூச எனாமல் மற்​றும் செயற்கை சாயத்தை அடிப்​படை​யாக கொண்ட வண்​ணப் பூச்​சுகள், எண்​ணெய் வண்​ணப் பூச்​சுகளை கண்​டிப்​பாக பயன்​படுத்​தக்​கூ​டாது.

நீர் சார்ந்த, மக்​கக்​கூடிய, நச்சுக் கலப்​பற்ற இயற்கை சாயங்​கள் மட்​டுமே பயன்​படுத்​தப்பட வேண்​டும். பூஜைக்கு சுற்​றுச்​சூழலுக்கு உகந்த பூக்​கள், இலை​களை​யும், பிர​சாத விநி​யோகத்​துக்கு மக்​கும் தட்​டு​கள், கண்​ணாடி கோப்​பைகளை​யும் பயன்​படுத்​தலாம்.

விநாயகர் சிலை​களை மாவட்ட நிர்​வாகத்​தால் ஒவ்​வொரு மாவட்​டத்​துக்​கும் அறிவிக்​கப்​பட்ட இடங்​களில் மட்​டுமே விதி​முறை​களை பின்​பற்றி கரைக்க வேண்​டும். அனு​மதி இல்​லாத நீர்​நிலை​களில் சிலை​களை கரைக்​கக் கூடாது. எனவே, பொது​மக்​கள் விநாயகர் சிலை​களை கரைப்​ப​தற்​கான வழி​முறை​களை பின்​பற்​றி, சுற்​றுச்​சூழலை பாது​காக்க ஒத்​துழைப்பு வழங்க வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

விநாயகர் சதுர்த்தி: அனுமதி இல்லாத நீர்நிலைகளில் சிலைகளை கரைக்க கூடாது - வழிகாட்டுதல்கள் வெளியீடு
தமிழகம் முழுவதும் கே.என்.நேரு தொடர்புடைய 30 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in