விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகல கொண்டாட்டம்: தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸார் பாதுகாப்பு

பந்தல்களில் 37,000 சிலைகள் அமைத்து வழிபட அனுமதி
விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, ஹைதராபாத்தில் உள்ள கைரதாபாத்தில் வைக்கப்பட்டிருந்த 72 அடி உயர விநாயகர் சிலைக்கு நேற்று  சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன. இதில், பக்தர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.படம்: பிடிஐ

விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, ஹைதராபாத்தில் உள்ள கைரதாபாத்தில் வைக்கப்பட்டிருந்த 72 அடி உயர விநாயகர் சிலைக்கு நேற்று சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன. இதில், பக்தர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.படம்: பிடிஐ

Updated on
2 min read

சென்னை: ​வி​நாயகர் சதுர்த்​தியை முன்​னிட்டு தமிழகம் முழு​வதும் 1 லட்​சம் போலீ​ஸார் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர். பந்​தல்​களில் 37 ஆயிரம் விநாயகர் சிலைகளை வைத்து பூஜை நடத்த அனு​மதி வழங்​கப்​பட்​டுள்​ளது.

நாடு முழு​வதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலா கல​மாக கொண்​டாடப்​படு​கிறது. இதையொட்டி பாஜக, இந்து முன்​னணி உள்​ளிட்ட பல்​வேறு இந்து அமைப்​பு​கள், இளைஞர் அமைப்​பினர், குடி​யிருப்​பு​வாசிகள் என பல்​வேறு தரப்பினரும் ஆங்​காங்கே பந்​தல் அமைத்து பிரம்​மாண்ட விநாயகர் சிலைகளை வைத்து வழிபட போலீஸாரிடம் அனு​மதி கோரி​யிருந்​தனர். இதைத் தொடர்ந்​து, சென்​னை​யில் 1,562 சிலைகள் உட்பட தமிழகம் முழு​வதும் சுமார் 37 ஆயிரம் சிலைகளை வைத்து வழிபட போலீ​ஸார் அனு​மதி வழங்​கி​யுள்​ளனர்.

இதுதொடர்​பாக பல்​வேறு கட்​டுப்​பாடு​களும் விதிக்​கப்​பட்​டுள்​ளன. அதன்​படி, உயர் நீதி​மன்​ற வழி​காட்​டு​தல்​படி​யும், மாசுக் கட்​டுப்​பாட்டு வாரியத்​தின் அறி​வுறுத்​தல்படி​யும், தீயணைப்​புத் துறை, மாநக​ராட்​சி​யின் தடை யில்லா சான்​றிதழுட​னும் விநாயகர் சிலைகள் நிறு​வி, வழி​பாடு​கள் செய்​ய​வும், பின்னர் அவற்றை பாது​காப்​பான முறை​யில் நீர்​நிலைகளில் கரைக்​க​வும் அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

சிலை​யின் உயரம் 10 அடிக்கு மேல் இருக்​கக் கூடாது. பிற வழி​பாட்​டுத் தலங்​கள், மருத்​து​வ​மனை​கள், கல்வி நிறு​வனங்​கள் ஆகிய​வற்​றின் அரு​கில் சிலை அமைப்​பதை தவிர்க்க வேண்​டும். மத வெறுப்​பைத் தூண்​டும் வகை​யிலோ, பிற மதத்​தினரின் உணர்​வு​களைப் புண்​படுத்​தும் வகை​யிலோ கோஷமிடக் கூடாது என்று அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்​டாடப்​படும் நிலை​யில், பெரும்​பாலும் அனைத்து இடங்​களி​லும் நேற்று மாலையே பந்​தல்​களில் சிலைகள் அமைக்​கப்​பட்​டன. அனைத்து பந்​தல்​களி​லும் தலா ஒரு காவலர், 2 தன்​னார்​வலர்​கள் பாது​காப்​புக்​காக நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். சிசிடிவி கேம​ராக்​களும் பொருத்தி, கண்​காணிக்​கப்​படு​கிறது. இந்த சிலைகளுக்கு இன்று முதல் பூஜைகள் செய் யப்​பட்டு 19, 20-ம் தேதி​களில் (சனி, ஞாயிறு) ஊர்வல​மாக எடுத்​துச் செல்​லப்​பட்டு நீர் நிலைகளில் கரைக்​கப்பட உள்​ளது.

விநாயகர் சதுர்த்தி பாது​காப்பு பணி​யில் சென்​னை​யில் மட்டும் 16 ஆயிரம் போலீ​ஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழகம் முழு​வதும் 1 லட்​சம் போலீ​ஸார் பாதுகாப்பில் ஈடு​பட்​டுள்​ளனர். உளவுப் பிரிவு போலீ​ஸார் ரகசிய கண்​காணிப்​பில் ஈடு​பட்​டுள்​ளனர்.

இந்து முன்​னணி மாநில செய்​தித் தொடர்​பாளர் இளங்​கோவன் கூறும்​போது, “தமிழ கம் முழு​வதும் இந்து முன்​னணி சார்​பில் பெரிய மற்​றும் சிறிய அளவி​லான சிலைகள் என மொத்​தம் 1.39 லட்​சம் சிலைகள் வைக்​கப்​பட்​டுள்​ளன. சென்​னை​யில் 5,501 சிலைகள் வைக்​கப்​பட்டு வழி​பாடு​கள் நடை​பெறும்.

சென்​னை​யில் இந்து முன்​னணி சார்​பில் 20-ம் தேதி ஊர்​வலம் நடை​பெறும். தென் சென்னை பகு​தி​யில் வைக்​கப்​பட்​டுள்ள விநாயகர் சிலைகள் வள்​ளுவர் கோட்​டத்​தில் இருந்​தும், மத்​திய சென்​னை​யில் வைக்​கப்​பட்​டுள்ள விநாயகர் சிலைகள் திரு​வல்​லிக்​கேணி​யில் இருந்​தும், வட சென்னை பகு​தி​யில் வைக்​கப்​பட்​டுள்ள சிலைகள் முத்​து​சாமி பாலத்​தில் இருந்​தும் ஊர்​வல​மாக கொண்​டு செல்​லப்​பட்​டு கடலில்​ கரைக்​கப்​படும்​” என்​றார்​.

<div class="paragraphs"><p>விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, ஹைதராபாத்தில் உள்ள கைரதாபாத்தில் வைக்கப்பட்டிருந்த 72 அடி உயர விநாயகர் சிலைக்கு நேற்று  சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன. இதில், பக்தர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.படம்: பிடிஐ</p></div>
அரிய கனிமங்களைத் தடை செய்யக் கூடாது: பிரிக்ஸ் கடைசி நாள் மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in