

கரூர்: கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன் வந்தால் டெல்லி செல்ல தயார் என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கரூரில் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில், அவர் பேசும்போது, கரூரில் 41 அப்பாவிகள் உயிரிழக்க காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று சொன்னேன்.
இதில், முன்னாள் அமைச்சருக்கு சம்மன் வந்துள்ளது குறித்து கருத்து தெரிவித்தேன். ஆனால் அவர் மருத்துவமனைக்கு சென்றவர்களுக்கும் சம்மன் வர வேண்டும் என்கிறார்.
நானும் மருத்துவமனை சென்றேன். எனக்கு சிபிஐ சம்மன் வந்தால், நான் அதற்கு தயார். டெல்லி சென்று நடந்ததை கூறுவேன். என் மேல் எந்தத் தவறும் இல்லை என்றார்.