“விஜய் அலை என்பதால் திமுக தோற்றது என்பதில் உண்மையில்லை” - தோப்பு வெங்கடாசலம்

தோப்பு வெங்கடாசலம்

தோப்பு வெங்கடாசலம்

Updated on
1 min read

ஈரோடு: உட்​கட்சி பூசலால் தான் திமுக ஆட்​சியை இழந்​தது என அக்​கட்​சி​யின் ஈரோடு மத்​திய மாவட்ட செய​லா​ளர் பொறுப்​பில் இருந்து விடுவிக்​கப்​பட்ட தோப்பு வெங்​க​டாசலம் விமர்சித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் பெருந்​துறை​யில் உள்ள திமுக அலு​வல​கத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: ஈரோடு மாவட்​டத்​தில் அமைச்​ச​ராக இருந்த காலத்​தில் கொடிவேரி கூட்​டுக் குடிநீர் திட்​டம், அத்​திக்​கடவு- அவி​நாசி திட்​டம், ஊராட்​சிக்​கோட்டை கூட்​டுக் குடிநீர் திட்​டம் போன்ற குடிநீர் திட்​டங்​களை கொண்டு வந்து மக்​களின் பல ஆண்​டு​கால பிரச்​சினைக்கு தீர்வு கண்​டுள்​ளேன்.

நீர் நிரம்​பிய காலத்​திலேயே இத்​திட்​டத்தை நிறைவேற்றி இருந்​தால் திமுக​வுக்கு கூடு​தலாக வாக்​கு​கள் கிடைத்​திருக்கும். ஆனால் மாவட்ட செயலாளர் சொல்​வதை எந்த அதி​காரிகளும் பொருட்​படுத்துவதில்​லை. தற்​போதைய வரு​வாய்த் துறை அமைச்​சர் செங்​கோட்​டையனிடம் விவ​சா​யிகள் இதே கோரிக்​கையை வலி​யுறுத்​தினர். ஓரிரு வாரங்​களி​லேயே இதுதொடர்​பாக நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது.

இதற்கு யார் காரணம் என்​பதை திமுக தலைமை ஆராய வேண்​டும். திமுக என் மீது எடுத்த நடவடிக்கை ஒரு வார காலத்​தில் ஆராய்ந்து தலைமை உரிய பதில் தர வேண்​டும். வேறு கட்​சிக்கு செல்​லும் எண்​ணமோ, மீண்​டும் அதி​முக​வுக்குச் செல்​லும் எண்​ணமோ எனக்கு இல்​லை. இருக்​கும் இடத்​துக்கு நாம் விசு​வாச​மாக இருக்க வேண்​டும். விஜய் அலை என்பதால் திமுக தோற்றது என்பதில் உண்மையில்லை. உட்​கட்சி பூசலால்​தான் திமுக ஆட்​சியை இழந்​துள்​ளது.

முன்​னாள் அமைச்சர் முத்துச்​சாமி நினைத்​திருந்​தால், ஈரோடு மாவட்​டத்​தில் உள்ள 8 தொகு​தி​களி​லும் நிர்​வாகி​களை அழைத்து பேசி இருந்தால் உட்​கட்சி பூசல்களை தீர்த்து வைத்து இருக்​கலாம். இது நடந்​திருந்​தால் திமுக 8 தொகு​தி​களி​லும் வெற்றிவாய்ப்பை பெற்றிருக்​கும். இவ்வாறு தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>தோப்பு வெங்கடாசலம் </p></div>
“இந்தியாவின் அதிவேக வளர்ச்சிக்கு இளைஞர் சக்தியே முக்கிய காரணம்” - பிரதமர் மோடி பெருமிதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in