முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்: சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் ஏற்பாடுகள் தீவிரம்

இரு முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற கோப்புகளில் கையெழுத்திடுகிறார்
தமிழக முதல்வராக விஜய் நாளை பதவியேற்க உள்ளார். சென்னையில் பதவியேற்பு விழா நடைபெற உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தை நேற்று ஆய்வு செய்த அதிகாரிகள். படம்: ம.பிரபு

தமிழக முதல்வராக விஜய் நாளை பதவியேற்க உள்ளார். சென்னையில் பதவியேற்பு விழா நடைபெற உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தை நேற்று ஆய்வு செய்த அதிகாரிகள். படம்: ம.பிரபு

Updated on
2 min read

சென்னை: சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வெற்றி பெற்று தனிப்​பெரும் கட்​சி​யாக உரு​வெடுத்​துள்ள தவெக ஆட்​சி​யமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு விஜய் கடிதம் அனுப்​பி​யுள்​ளார். ஆளுநர் அழைப்பு விடுத்த பிறகு, முதல்​வ​ராக விஜய் நாளை பதவி​யேற்க உள்​ளார். சென்னை நேரு உள் விளை​யாட்டு அரங்​கில் பதவி​யேற்பு விழாவை பிரம்​மாண்​ட​மாக நடத்த ஏற்​பாடு​கள் முழு​வீச்​சில் நடந்து வரு​கின்​றன. ‘மாதம் 200 யூனிட் இலவச மின்​சா​ரம், தமிழகம் முழு​வதும் அனைத்து பேருந்​துகளி​லும் பெண்​களுக்கு இலவசப் பயணம்’ ஆகிய 2 முக்​கிய திட்​டங்​களுக்​கான கோப்​பு​களில் அவர் முதல் கையெழுத்​திடு​வார் என்று கூறப்​படு​கிறது.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் 108 இடங்​களைக் கைப்​பற்​றி, தனிப்​பெரும் கட்​சி​யாக உரு​வெடுத்​துள்ள தவெக, ஆட்சி அமைப்​ப​தற்​கான பணி​களில் தீவிர​மாக இறங்​கி​யுள்​ளது. இதுதொடர்​பாக சென்னை பனையூரில் உள்ள கட்​சித் தலைமை அலு​வல​கத்​தில், வெற்றி பெற்ற வேட்​பாளர்​களு​டன் கட்​சித் தலை​வர் விஜய் நேற்று முக்​கிய ஆலோ​சனை நடத்​தி​னார்.

முன்​ன​தாக, முதல்​வருக்கு இணை​யான பாது​காப்​புடன் அலு​வல​கம் வந்த விஜய்க்கு தொண்​டர்​கள் உற்​சாக வரவேற்பு அளித்​தனர். பின்​னர், தவெக கொள்​கைத் தலை​வர்​களின் சிலைகளுக்கு அவர் மாலை அணி​வித்து மலர்​தூவி மரி​யாதை செலுத்​தி​னார். வெற்றி பெற்ற வேட்​பாளர்​களுக்கு வாழ்த்து தெரி​வித்​தார்.

இதையடுத்து நடை​பெற்ற கூட்​டத்​தில், தவெக சட்​டப்​பேர​வைக் குழுத் தலை​வ​ராக விஜய் ஒரு​மன​தாகத் தேர்வு செய்​யப்​பட்​டார். இதற்​கான உறு​தி​மொழிப் பத்​திரத்​தில் அனைத்து வெற்றி வேட்​பாளர்​களும் கையெழுத்​திட்​டனர். இத்​தேர்​தலில் பெரம்​பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகு​தி​களில் போட்​டி​யிட்​டு, இரண்​டிலும் வெற்றி பெற்​றுள்ள விஜய், சட்ட விதி​களின்​படி, ஒரு தொகு​தி​யில் ராஜி​னாமா செய்ய வேண்​டும்.

அதன்​படி, திருச்சி கிழக்கு தொகுதி பதவியை ராஜி​னாமா செய்ய விஜய் முடிவு செய்​துள்​ள​தாகத் தெரி​கிறது. அங்கு நடை​பெற உள்ள இடைத்​தேர்​தலில், முன்​னாள் அமைச்​சர் கு.ப.கிருஷ்ணனை வேட்​பாள​ராக நிறுத்​த​வும் நேற்​றைய கூட்​டத்​தில் ஆலோ​சிக்​கப்​பட்​டுள்​ளது.

இதற்​கிடையே, ஆட்​சி​யமைக்க உரிமை கோரி ஆளுநர் அர்லேகருக்கு விஜய் கடிதம் எழு​தி​யுள்​ளார். இதுதொடர்​பாக ஆளுநர் மாளி​கைக்கு மின்​னஞ்​சலில் அனுப்​பி​யுள்ள கடிதத்​தில், மே 7-ம் தேதி (நாளை) பதவி​யேற்க தயா​ராக உள்​ள​தாக​வும், 2 வார காலத்​துக்​குள் சட்​டப்​பேர​வை​யில் பெரும்​பான்​மையை நிரூபிப்​போம் என்​றும் அதில் தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக ஆளுநரை இன்று சந்​திக்​க​வும் விஜய் திட்​ட​மிட்​டுள்​ளார். அப்​போது, ஆட்​சி​யமைக்க உரிமை கோரும் கடிதத்தை ஆளுநரிடம் வழங்​கு​வார்.

ஆளுநர் அழைப்பு விடுக்​கும்​பட்​சத்​தில், முதல்​வ​ராக விஜய் நாளை பதவி​யேற்​பார் என்று கூறப்​படு​கிறது. அவருடன் அமைச்​சர்​களும் பதவி​யேற்க உள்​ளனர். அமைச்​சர​வை​யில் செங்​கோட்​டையன், ஜேசிடி. பிர​பாகர், ஆனந்த், ஆதவ் அர்​ஜு​னா, சிடிஆர். நிர்​மல்​கு​மார், மரிய வில்​சன், ராஜ்மோகன், அருண்​ராஜ், சத்​தி​ய​பா​மா, விஜயலட்​சுமி, ஸ்ரீநாத் உள்​ளிட்​டோர் இடம்​பெற வாய்ப்பு உள்​ள​தாக கூறப்​படு​கிறது.

பதவி​யேற்பு விழாவை சென்னை நேரு உள் விளை​யாட்டு அரங்​கில் பிரம்​மாண்​ட​மாக நடத்த ஏற்​பாடு​கள் நடந்து வரு​கின்​றன. இதையொட்டி, தவெக வெற்றி வேட்​பாளர்​கள் அனை​வரும் மாமல்​லபுரம் அரு​கில் உள்ள நட்​சத்​திர விடு​தி​யில் தங்க வைக்​கப்​பட்​டுள்​ளனர். இதற்​கிடையே, முதல்​வ​ராக நாளை பதவி​யேற்​கும் விஜய், மக்​கள் நலன் சார்ந்த 2 முக்​கிய திட்​டங்​களுக்​கான கோப்​பு​களில் கையெழுத்​திட உள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

‘‘தகு​தி​யுள்ள வீடு​களுக்கு மாதம் 200 யூனிட் இலவச மின்​சா​ரம் வழங்​கப்​படும். அதே​போல, நகரப் பேருந்​துகள் மட்​டுமின்​றி, மாநிலம் முழு​வதும் இயங்​கும் அனைத்து அரசுப் பேருந்​துகளி​லும் பெண்​கள் கட்​ட​ணமின்றி பயணிக்​கும் வகை​யில் ‘வெற்​றிப் பயணம்’ திட்​டம் செயல்​படுத்​தப்​படும்’ என்று தேர்​தல் பிரச்​சா​ரத்​தின்​போது முக்​கிய வாக்​குறு​தியை விஜய் அளித்​திருந்​தார். பதவி​யேற்​றதும், இந்த இரு முக்​கிய திட்​டங்​களுக்​கான கோப்​பு​களில் விஜய் முதல் கையெழுத்​திடு​வார் என்று தவெக வட்​டாரத்​தில் கூறப்​படு​கிறது.

தலைமைச் செயலர் ஆலோ​சனை: பதவி​யேற்பு விழா குறித்து தலை​மைச் செயலர் சாய்​கு​மார் தலை​மை​யில் நேற்று ஆலோ​சனை நடை​பெற்​றது. இதில், உள்​துறைச் செயலர் மணி​வாசன், பொதுத் துறை செயலர் ரீட்டா ஹரீஷ் தாக்​கர், டிஜிபி சந்​தீப்​ ​ராய்​ ரத்​தோர், சென்​னை ​காவல்​ ஆணை​யர்​ அபின்​ தினேஷ் மோடக்​ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​. விழா நடை​பெறும்​ நேரு உள்​விளை​யாட்​டு அரங்​கில்​ செய்​யப்​பட வேண்​டிய ஏற்​​பாடு​கள்​, ​பாது​காப்பு அம்​சங்​கள்​ குறித்​து இக்​கூட்​டத்​தில்​ ஆலோ​சிக்​கப்​பட்​டது.

<div class="paragraphs"><p>தமிழக முதல்வராக விஜய் நாளை பதவியேற்க உள்ளார். சென்னையில் பதவியேற்பு விழா நடைபெற உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தை நேற்று ஆய்வு செய்த அதிகாரிகள். படம்: ம.பிரபு</p></div>
முதல்வர் பதவியில் இருந்து மு.க.ஸ்டாலின் ராஜினாமா: ஆளுநர் அர்லேகர் ஏற்றுக் கொண்டார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in