வேளாங்கண்ணிக்கு விஜய் வருகை ரத்து: விடிய விடிய காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம்

வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வெளியே காத்திருந்த தவெக தொண்டர்கள்.

வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வெளியே காத்திருந்த தவெக தொண்டர்கள்.

Updated on
1 min read

நாகப்பட்டினம்: வேளாங்​கண்ணி வரு​கையை தவெக தலை​வர் விஜய் திடீரென ரத்து செய்​த​தால், அவரை பார்ப்​ப​தற்​காக விடிய விடிய காத்​திருந்த ரசிகர்​கள் ஏமாற்​றமடைந்​தனர். அதி​கள​வில் தொண்​டர்​கள் குவிந்​த​தால் ஆலய திருப்​பலிக்கு இடையூறு ஏற்​பட்​டது.

தவெக தலைவர் விஜய் நேற்று வேளாங்​கண்ணிக்கும் நாகூர் தர்கா​வுக்​கும் வர​வுள்​ள​தாக தகவல் வெளி​யானது.இதையடுத்​து, வேளாங்​கண்ணி பேராலய முகப்​பில் நேற்று முன்​தினம் நள்​ளிரவு முதலே ரசிகர்​கள், தொண்​டர்​கள் என ஆயிரக்​கணக்​கானோர் காத்​திருந்​தனர். பேராலய முகப்​பில் வர்​ணம் பூசுவதற்​காக கட்​டப்​பட்​டிருந்த சாரத்​தில் ஏறி அமர்ந்​திருந்​தனர். அவர்​களை பாது​காவலர்​கள் கீழே இறங்​கச் சொல்​லி​யும் இறங்க மறுத்​து​விட்​டனர்.

பின்​னர், அதி​காலை 5 மணிக்கு பேராலய கதவு​கள் திறந்​தவுடன் அனை​வரும் உள்ளே புகுந்​தனர். அதி​காலை 5.40 மணி முதல் திருப்​பலி தொடங்​கிய நிலை​யில், அங்​கிருந்த அவரது ரசிகர்​களும், தொண்​டர்​களும் முழக்​கமிட்​டபடியே இருந்​தனர். இதனால், திருப்​பலி நடத்​து​வ​தில் சிரமம் ஏற்​பட்​டது. இதையடுத்​து, வழி​பாட்​டுக்கு இடையூறு இன்றி அமைதி காக்க வேண்​டும் என ஒலிபெருக்கி மூலம் பேராலய உதவி பங்​குத் தந்தை ரசிகர்​களை அமை​திப்​படுத்​தி​னார்.

இதனிடையே, விஜய் வருகை ரத்து செய்​யப்​பட்​ட​தாக தகவல் பரவியது. இதனால் விடிய விடிய காத்​திருந்த தொண்​டர்​கள் ஏமாற்​றத்​துடன் பேரால​யத்​திலிருந்து வெளி​யேறினர். இதே​போல, நாகூர் தர்​கா​விலும் நேற்று முன்​தினம் நள்​ளிரவு முதல் திரண்​டிருந்​தவர்​களும் ஏமாற்​றத்​துடன் திரும்​பினர்.

இதனிடையே தவெக பொதுச்செய​லா​ளர் என்​.ஆனந்த் நேற்று வேளாங்​கண்ணி பேரால​யத்​தி​லும், அதைத் தொடர்ந்து நாகூர் தர்​கா​விலும் பிரார்த்​தனை செய்​தார். அப்​போது அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “தவெக​வுக்கு வெற்றி வாய்ப்பு பிர​காச​மாக உள்​ளது. தவெக தலை​மை​யில் ஆட்சி அமை​யும். தவெக தலை​வர் விஜய் கண்​டிப்​பாக முதல்​வ​ராக பதவி​யேற்​பார்” என தெரி​வித்​தார்​.

<div class="paragraphs"><p>வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வெளியே காத்திருந்த தவெக தொண்டர்கள்.</p></div>
தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கும்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உறுதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in