பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்: முதல்வர் விஜய், அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்: முதல்வர் விஜய், அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்​திய அரசு உடனடி​யாக திரும்​பப் பெற வேண்​டும் என்று முதல்​வர் விஜய் மற்​றும் பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர்.

இதுதொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட அறிக்​கை​களில் கூறி​யிருப்​ப​தாவது:

முதல்​வர் விஜய்: 5 மாநிலங்​களில் தேர்​தல் முடிந்​த​பின் பெட்​ரோலியப் பொருட்​களின் விலையை உயர்த்​தி​யிருப்​பது ஏற்​புடையதல்ல. இந்த விலை உயர்வு இருசக்கர வாக​னங்​கள் மற்​றும் பேருந்​துகளை பயன்​படுத்​தும் ஏழை, எளிய, நடுத்தர மக்​களின் மாத வரு​வா​யில் பெரு​மளவு பாதிப்பை ஏற்​படுத்​தும்.

அன்​றாடப் பொருட்​களின் விலை உயர்​வுக்கு காரண​மாக அமைவதுடன் ஏழை, எளிய மக்​களின் வாங்​கும் திறனை​யும் பாதிக்​கும். குறு, சிறு தொழில் நிறு​வனங்​களுக்கு உற்​பத்​திச் செல​வும் அதி​கரிப்​ப​தால், சந்​தை​யிலும், ஏற்​றும​தி​யிலும் மந்​தநிலை ஏற்பட வாய்ப்​புள்​ளது.

எனவே, ஏழை, எளிய, நடுத்தர மக்​கள் மற்​றும் குறு, சிறு தொழில் நிறு​வனங்​களைப் பாதிக்​கும் பெட்​ரோலியப் பொருட்​களின் விலை உயர்வை மத்​திய அரசு உடனடி​யாக திரும்​பப்​பெற வேண்​டும்

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: தமிழகத்​தில் புதி​தாக பொறுப்​பேற்​றுள்ள தவெக அரசு மாற்​றம் வேண்​டும் என்ற கொள்​கையை அடிப்​படை​யாக வைத்து செயல்​படு​கிறதென்று சொல்​கிறார்​கள். பெட்​ரோலுக்​கும், டீசலுக்​கும், எரி​வாயு சிலிண்​டருக்​கும் உள்ள விற்​பனை வரியை குறைக்க வேண்​டும் என்று கேட்​டுக்​கொள்​கிறேன்.

தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை: ஏற்​கெனவே அத்​தி​யா​வசிய பொருட்​களின் விலை உயர்​வால் பொது​மக்​கள் கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், இந்த எரிபொருள் விலை உயர்வு மேலும் பணவீக்​கத்தை அதி​கரித்​து, நடுத்தர மற்​றும் ஏழை மக்​களின் வாழ்​வா​தா​ரத்தை பெரிதும் பாதிக்​கும்.

மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் சண்​முகம்: பெட்​ரோல், டீசல் விலை உயர்வு மக்​களின் அன்​றாட வாழ்க்​கை​யில் சங்​கி​லித் தொடர் போன்ற பாதிப்​பு​களை உரு​வாக்​கும். புயலில் சிக்​கிய படகு போல குடும்​பங்​கள் தள்​ளாடும் நிலை ஏற்​படும். மத்​திய அரசு இந்த விலை உயர்வை உடனடி​யாக திரும்​பப் பெற வேண்​டும்.

பாமக தலை​வர் அன்​புமணி: இந்​தி​யா​வில் பெட்​ரோல், டீசல் விலை ஏற்​கெனவே அதி​க​மாக உள்​ளன. இத்​தகைய சூழலில் கச்சா எண்​ணெய் விலை உயர்​வின் தாக்​கத்தை இயன்​றவரை எண்​ணெய் நிறு​வனங்​களும், மத்​திய அரசும் தாங்​கிக் கொண்டு விலை உயர்வை தவிர்த்​திருக்க வேண்​டும்.

விசிக தலை​வர் திரு​மாவளவன்: பெட்ரோல்​-டீசல் விலையை லிட்​டருக்கு ரூ.3 என உயர்த்​தி​யிருப்​ப​தன் மூலம் பாஜக அரசு எளிய மக்​களின் அடிவ​யிற்​றில் கை வைத்​துள்​ளது. இதனால் மிக​வும் பாதிக்​கப்படப் போவது விளிம்​புநிலை​யைச் சார்ந்த ஏழை-எளிய உழைக்​கும் மக்​கள்​தான்.

அமமுக பொதுச்​செய​லா​ளார் டிடி​வி.​தினகரன், தவக தலை​வர் வேல்​முரு​கன், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன், உள்ளிட்டோரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்: முதல்வர் விஜய், அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க அமெரிக்காவிடம் பணியும் அரசு: காங்கிரஸ் கடும் தாக்கு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in