இலங்கையிலுள்ள சீதை அம்மன் கோயிலில் இந்திய குடியரசு துணைத் தலைவர் வழிபாடு

அசோக வனத்தில் உள்ள அனுமன் கோயிலில் தரிசனம் செய்த குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்.

அசோக வனத்தில் உள்ள அனுமன் கோயிலில் தரிசனம் செய்த குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்.

Updated on
1 min read

ராமேசுவரம்: இலங்கையிலுள்ள சீதை அம்​மன் கோயி​லில் குடியரசு துணைத் தலை​வர் சி.பி. ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம் செய்​தார். இலங்கைக்கு 2 நாள் அரசு​முறைப் பயண​மாக நேற்று முன்​தினம் சென்ற அவர், அதிபர் அனுர குமார திச​நாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, எதிர்க்​கட்​சித் தலை​வர் சஜித் பிரேமதாசா உள்​ளிட்ட முக்​கிய பிர​முகர்களைச் சந்​தித்​தார்.

மேலும், இந்​திய வம்​சாவளி தமிழ் சமூகத் தலை​வர்​களை​யும், வடக்கு மற்​றும் கிழக்கு பிராந்​தி​யங்​களைச் சேர்ந்த தமிழ் தலை​வர்​களை​யும் சந்​தித்து கலந்​துரையாடி​னார். இரண்​டாவது நாளான நேற்​று, குடியரசு துணைத் தலை​வர் நுவரெலியா மாவட்​டத்​தி​லுள்ள ராகலா, லிட்​டில் ஸ்டேல் எஸ்​டேட்​டில் இந்​திய வீட்​டு​வச​தித் திட்​டத்​தின்கீழ் கட்​டித் தரப்​பட்ட வீடு​களை பார்​வை​யிட்​டு, பயனாளி​களு​டன் கலந்​துரை​யாடி​னார்.

‘இலங்​கை​யில் உள்ள தமிழ் மக்​களின் நலனுக்​காக இந்​திய அரசும், மக்​களும் ஆழ்ந்த அர்ப்​பணிப்​புடன் உள்​ளனர். இலங்​கை​யின் வடக்கு மற்​றும் கிழக்கு மாகாணங்​களில் உள்ள தமிழ் குடும்​பங்​களுக்​கும், தோட்​டப் பகு​தி​களில் உள்ள இந்​திய வம்​சாவளி தமிழ் குடும்​பங்​களுக்​கும், இந்​திய அரசு இது​வரை 50,000 வீடு​களைகட்​டித் தந்​துள்​ளது.

கூடுதலாக 10,000 வீடு​கள் கட்​டித்தரப்​படும்’ என அப்போது தெரி​வித்​தார். ராமாயணத்​தில் அசோகவனம் என வர்​ணிக்​கப்​பட்ட பகு​தி, தற்​போது ‘சீதா எலிய’ என்ற இடத்தில் அமைந்​துள்ளது.

இங்கு சீதை அம்​மனுக்கு கோயில் அமைந்துள்​ளது. சி.பி.​ரா​தாகிருஷ்ணன் இந்தக் கோயிலில் வழிபட்​டார். பின்னர் அனு​மன் கோயி​லிலும் வழிபட்​டார்.

ராமாயணத்​துடன் தொடர்​புடைய இந்த புனிதக் கோயில், இந்​தி​யா​வுக்​கும், இலங்​கைக்​கும் இடையி​லான ஆழமான கலாச்​சார மற்​றும் நாகரி​கத் தொடர்​பு​களுக்கு ஒரு ஆழ்ந்த நினை​வூட்​டலாக விளங்​கு​கிறது என அவர் தெரி​வித்​தார். முன்​ன​தாக, சி.பி.​ரா​தாகிருஷ்ணனுக்கு சீதை அம்​மன் கோயி​லில் வரவேற்பு அளிக்​கப்​பட்​டது.

<div class="paragraphs"><p>அசோக வனத்தில் உள்ள அனுமன் கோயிலில் தரிசனம் செய்த குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்.</p></div>
பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழப்பு 25 ஆனது: உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in