பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழப்பு 25 ஆனது: உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Updated on
1 min read

விருதுநகர்: ​விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி​ விபத்​தில் மேலும் 2 பெண்​கள் நேற்று உயி​ரிழந்​தனர். இதையடுத்து உயிரிழப்பு எண்​ணிக்கை 25 ஆக உயர்ந்​தது. உடல்​களை வாங்க மறுத்து உறவினர்​கள் மறியலில் ஈடுபட்டனர்.

விருதுநகர் அருகே உள்ள கட்​ட​னார்​பட்டி பட்​டாசு ஆலை​ வெடிவிபத்​தில் 23 பேர் உயி​ரிழந்​தனர். இவர்​களில் 19 பேரின் உடல்​கள் நேற்று முன்​தினம் இரவு உறவினர்​களால் அடை​யாளம் காணப்​பட்​டன.

4 பேர் இது​வரை அடை​யாளம் காணப்​பட​வில்லை. இந்த விபத்​தில் பலத்த ​கா​யம் அடைந்து விருதுநகர் அரசு மருத்​து​வ​மனை​யில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சேர்​வைக்​காரன் பட்​டியைச் சேர்ந்த பேச்​சி​யம்​மாள் (51), திருத்​தங்​கல் பஞ்​சவர்​ணம் (56) ஆகியோர் நேற்று உயி​ரிழந்​தனர். இதையடுத்து உயிரிழப்பு எண்​ணிக்கை 25 ஆனது.

சேர்​வைக்​காரன்​பட்​டி​யில் ஒரே ஊரில் ஓர் ஆண் உட்பட 19 பேர் உயி​ரிழந்​துள்​ள​தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்​கியது. மேலும், உயிழந்​தோரின் குடும்​பத்​தினருக்கு தலா ரூ.20 லட்​சம் இழப்​பீடு வழங்க வேண்​டும், குடும்​பத்​தில் ஒரு​வருக்கு அரசு வேலை வழங்க வேண்​டும். ஆலை உரிமை​யாளரை கைதுசெய்ய வேண்​டும்.

ஆலை நிர்​வாகம் சார்​பில் வழக்​க​மாக வழங்​கப்​படும் இழப்​பீட்​டுத்தொகை ரூ.5.50 லட்​சத்தை பெற்​றுத்தர வேண்​டும் என்று கோரி உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தினர் உடல்​களை வாங்க மறுத்து நேற்று மருத்​து​வ​மனை வளாகத்​தில் போராட்​டத்​தில் ஈடு​பட்டனர்.

இதனிடையே மாவட்ட ஆட்​சியர் சுகபுத்ரா பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து, தேர்​தல் நடத்தை விதி​களை காரணம் காட்டி இழப்பீடாக ரூ.4 லட்​சத்தை தற்போது வழங்​கு​வ​தாக​ தெரி​வித்​தார். ஆனால், இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதன்தொடர்ச்சியாக அமைச்​சர் சாத்​தூர் ராமச்​சந்​திரன் வீட்​டின் அரு​கில் போலீ​ஸாரின் தடையை மீறி மறியலில் ஈடு​பட்​டனர். அவர்​களிடம் எஸ்​.பி. நாதா பேச்​சு நடத்​தினர் ஆலை உரிமை​யாள​ரை கைது செய்ய 4 தனிப்​படைகள் அமைக்​கப்​பட்​டுள்​ள​தாகவும்​ தற்போது தரப்படும் இழப்​பீட்​டுத் தொகையை பெற்​றுக்​கொள்​ளு​மாறும் கூறி​னார்.

இதை ஏற்று கலைந்​துசென்​றனர். விருதுநகர் ஆட்​சி​யர் சுகபுத்ரா செய்​தி​யாளர்​களிடம் கூறுகை​யில், “இந்த விபத்​தில் உயி​ரிழந்​தோர் குடும்​பங்​களுக்கு தலா ரூ.5 லட்​சம் நிவாரணம் அறிவிக்​கப்​பட்​டுள்ளது.

பலத்த காயமடைந்​தோருக்கு ரூ.2 லட்​ச​மும், லேசான காயம் அடைந்​தோருக்கு ரூ.1 லட்​ச​மும் வழங்​கப்​படும்” என்​றார்.

<div class="paragraphs"><p>பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.</p></div>
திருப்பரங்குன்றத்தில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா புகார்: திமுக நிர்வாகி ரூ.50 லட்சத்துடன் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in