ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பொன்னை பாலு உள்ளிட்ட 3 பேரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பொன்னை பாலு உள்ளிட்ட 3 பேரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு
Updated on
1 min read

சென்னை: பகுஜன் சமாஜ் கட்​சி​யின் மாநிலத் தலை​வ​ராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024 ஜூலை 5-ம் தேதி பெரம்​பூரில் படு​கொலை செய்​யப்​பட்​டார்.

இந்த வழக்​கில் கைதான பொன்னை பாலு, மணி​கண்​டன், சந்​தோஷ் ஆகியோர் தங்​களுக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மூன்​றாவது முறை​யாக மனு தாக்​கல் செய்​திருந்​தனர்.

இந்த மனுக்​கள் மீதான விசா​ரணை நீதிபதி சி.குமரப்​பன் முன்​பாக நடந்​தது. அப்​போது மனு​தா​ரர்​கள் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் எம்​.ஸ்ரீதர், “மனு​தா​ரர்​கள் 700 நாட்​களுக்கு மேல் சிறை​யில் உள்​ளனர்.

குற்​றம் சாட்​டப்​பட்ட மற்​றவர்களுக்கு ஜாமீன் வழங்கப்​பட்​டுள்​ளது. வழக்கு தொடர்​பான குற்​றப்​பத்​திரி​கையை ரத்து செய்​து, சிபிஐ விசா​ரணைக்கு மாற்றி உயர் நீதி​மன்​றம் பிறப்​பித்​துள்​ளது.

ஆட்சி மாற்​றத்​துக்​குப் பிறகும் சிபிஐ விசா​ரணை தொடர்​பாக அரசு எந்த நிலைப்​பாட்​டை​யும் எடுக்​க​வில்​லை” என்​றார். காவல்​துறை தரப்​பில் ஆஜரான அரசு வழக்​கறிஞர் கணேஷ்கு​மார், “சாட்​சிகள் மிரட்​டப்​பட வாய்ப்புள்ளதால் இவர்களுக்கு ஜாமீன் வழங்​கக் கூ​டாது” என எதிர்ப்பு தெரி​வித்​தார். இரு தரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி, 3 பேரின் ஜாமீன் மனுக்​கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்​பி​டா​மல் தள்ளிவைத்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பொன்னை பாலு உள்ளிட்ட 3 பேரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு
61 நாள் தடைக்காலம் நாளை நிறைவடைகிறது: மீன்பிடி தொழிலுக்கு செல்ல தயாராகும் மீனவர்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in