டிட்வா புயல் பாதிப்புகளை மாநில பேரிடராக அறிவித்து நிதி வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு வேல்முருகன் வலியுறுத்தல்

டிட்வா புயல் பாதிப்புகளை மாநில பேரிடராக அறிவித்து நிதி வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு வேல்முருகன் வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: தமிழக வாழ்​வுரிமைக் கட்சி தலை​வர் தி.வேல்​முரு​கன் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை: டிட்வா புயல் காரண​மாக, தொடர்ச்​சி​யாகப் பொழி​யும் கனமழை மற்​றும் அதனால் ஏற்​பட்ட பெரு​வெள்​ளம், தமிழகம் முழு​வதும் பேரழிவை உரு​வாக்​கி​யுள்​ளது.

நெற்​ப​யிர்​கள், கரும்​பு, வாழை உள்​ளிட்ட முக்​கிய​மான பயிர்​கள், லட்​சக்​கணக்​கான ஏக்​கர்​கள் அளவில் முற்​றி​லும் அழிந்து கிடக்​கின்​றன. தேனி, மதுரை, திருநெல்​வேலி, தூத்​துக்​குடி, தென்​காசி, தஞ்​சாவூர் மாவட்​டங்​களில் ஆயிரக்​கணக்​கான ஏக்​கரில் பயிர் செய்​யப்​பட்​டிருந்த வாழை மரங்​கள் தரை​யில் விழுந்து கிடக்​கின்​றன.

விழுப்​புரம், கடலூர், சேலம், ஈரோடு, திருப்​பூர், கோவை மற்​றும் திண்​டுக்​கல் ஆகிய மாவட்​டங்​கள் முழு​வதும் கரும்​புத் தோட்​டங்​கள் கடுமை​யாகச் சேதமடைந்​துள்​ளன.

எனவே, இப்​பேரழி​வை, மாநில பேரிடர் என்று அறி​வித்​து, தமிழகத்​துக்கு ரூ.2ஆ​யிரம் கோடியை அவசர நிதி​யாக வழங்க வேண்​டும். இவ்​வாறு அதில் அவர் தெரி​வித்​துள்​ளார்.

டிட்வா புயல் பாதிப்புகளை மாநில பேரிடராக அறிவித்து நிதி வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு வேல்முருகன் வலியுறுத்தல்
ஜிஎஸ்டி குறைப்பின் பலன் மக்களுக்கு கிடைக்கும் வகையில் ஆவின் பொருட்கள் விலையை குறைக்க வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in