தமிழ், புலம்பெயர் தமிழ் ஆய்வு நிறுவனம் சார்பில் வஞ்சி உலகத் தமிழ் மரபு திரைப்பட விழா

விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் பங்கேற்பு
தமிழ் மற்றும் புலம்பெயர் தமிழ் ஆய்வு நிறுவனம் சார்பில் வஞ்சி உலகத் தமிழ் மரபு திரைப்படதொடக்க விழா சென்னை விஐடி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற  விஐடி வேந்தர் கோ.விசுவநாதனுக்கு  நினைவு பரிசை புலம்பெயர் தமிழர் நிறுவன தலைவர் கலைமதி, துணைத் தலைவர் பாலா கண்ணன் வழங்கினர். உடன் பெண்​ணாடம் வள்ளலார் அறநிலையத்​தின் தலைவர் முத்துஜோதி, புலம்பெயர் தமிழர் ஆய்வு  நிறுவன துணை தலைவர் ரேவதி சுயம்புலிங்கம், தயாரிப்பாளர் மாலா மணியன். படம்:எம்.முத்துகணேஷ்

தமிழ் மற்றும் புலம்பெயர் தமிழ் ஆய்வு நிறுவனம் சார்பில் வஞ்சி உலகத் தமிழ் மரபு திரைப்படதொடக்க விழா சென்னை விஐடி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற விஐடி வேந்தர் கோ.விசுவநாதனுக்கு நினைவு பரிசை புலம்பெயர் தமிழர் நிறுவன தலைவர் கலைமதி, துணைத் தலைவர் பாலா கண்ணன் வழங்கினர். உடன் பெண்​ணாடம் வள்ளலார் அறநிலையத்​தின் தலைவர் முத்துஜோதி, புலம்பெயர் தமிழர் ஆய்வு நிறுவன துணை தலைவர் ரேவதி சுயம்புலிங்கம், தயாரிப்பாளர் மாலா மணியன். படம்:எம்.முத்துகணேஷ்

Updated on
2 min read

மேலக்கோட்டையூர்: தமிழ், புலம்​பெயர் தமிழ் ஆய்வு நிறு​வனம் சார்​பில் வஞ்சி உலகத் தமிழ் மரபு திரைப்பட விழா நேற்று சென்​னை​யில் தொடங்​கியது. இதில் விஐடி வேந்​தர் கோ.​விசுவ​நாதன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

தமிழ் மற்​றும் புலம்​பெயர் தமிழ் ஆய்வு நிறு​வனம் சார்​பில் வஞ்சி உலகத் தமிழ் மரபு திரைப் பட தொடக்க விழா நேற்று வண்​டலூர் அருகே மேலக்​கோட்​டையூரில் உள்ள சென்னை விஐடி வளாகத்​தில் நடை​பெற்​றது. நிறுவன தலை​வர் க.கலைமதி தலை​மை​யில் நடை​பெற்ற இந்த நிகழ்​வில் விஐடி வேந்​தர் கோ.​விசுவ​நாதன், தயாரிப்​பாளர் மாலா மணி​யன், பெண்​ணாடம் வள்​ளலார் அறநிலை​யத்​தின் தலை​வர் மு.​முத்​துஜோதி உள்​ளிட்ட பலர் பங்​கேற்​றனர்.

நிகழ்ச்​சி​யில் விஐடி வேந்​தர் கோ.​விசுவ​நாதன் பேசி​ய​தாவது: தமிழ் மற்​றும் புலம்​பெயர் தமிழ் ஆய்வு நிறு​வனம் சார்​பில் வஞ்சி உலகத் தமிழ் மரபு திரைப்பட விழா​வில் பங்​கேற்​ப​தில் மிக​வும் மகிழ்ச்சி அடைகிறேன். உலகத் தமிழர்​களை ஒருங்​கிணைத்து இந்த அமைப்பு தொடங்​கப்​பட்​டிருப்​பது மகிழ்ச்​சியை ஏற்​படுத்தி உள்​ளது. தமிழர்​களை ஒன்று சேர்ப்​பதை தலை​யாயக் கடமை​யாக செய்து வரும் இந்த அமைப்பை பாராட்​டு​கிறேன்.

உலகமெங்​கும் தமிழ் பரந்து கிடக்​கிறது. சுமார் 160 நாடு​களில் தமிழர்​கள் வாழ்ந்து வரு​கின்​றனர். அதில் 100 நாடு​களில் அவர்​கள் குடி​யுரிமை பெற்​றுள்​ளனர். தமிழர்​களை ஒருங்​கிணைத்து திரைப்​படம் தயாரிக்​கும் முயற்​சி​யில் இறங்​கி​யிருப்​பது பாராட்​டுக்​குரியது.

பல நாடு​களில் தமிழர்​கள் இருந்​தா​லும் பலருக்கு தமிழ் பேச​வும், படிக்​க​வும், எழுத​வும் தெரிய​வில்​லை. தமிழ் வளர்ச்​சிக்​காக இந்த அமைப்பு செய்​யும் அனைத்து பணி​களுக்​கும் விஐடி சார்​பில் ஒத்​துழைப்பு வழங்​கப்​படும். உலகில் மூத்த மொழி தமிழ். தமிழ் மொழி வளர்ச்​சிக்​காக விஐடி என்​றும் உறு​துணை​யாக இருக்​கும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

நிகழ்ச்​சி​யில் விஐடி தமிழ் மன்ற நிர்​வாகி சிவக்​கு​மார், கர்​னாடக இசைப் பாடகர் சிக்​கில் குருசரண், தமிழ் மற்​றும் புலம்​பெயர் தமிழ் ஆய்வு நிறுவன துணைத் தலை​வர்​கள் மருத்​து​வர் ரேவதி சுயம்​புலிங்​கம், பாலா கண்​ணன், நாகலிங்​கம் உள்​ளிட்ட பலர் உரை​யாற்​றினர். விழா​வில் பங்​கேற்ற அனை​வருக்​கும் தமிழ் மற்​றும் புலம் பெயர் தமிழ் ஆய்வு நிறு​வனத்​தின் அடை​யாள​மான இலச்​சினை நினைவு பரி​சாக வழங்​கப்​பட்​டது. முன்​ன​தாக புலம் பெயர் தமிழர் தமிழ்த்​தாய் வாழ்த்து பாடப்​பட்​டது.

திரைப்பட விழா குறித்து அமைப்​பின் நிர்​வாகி​கள் கூறிய​தாவது: தமிழ் மொழி, வரலாறு, கலை, பண்​பாடு மற்​றும் மரபு​களின் வளமையை வருங்​கால சந்​த​தி​யினருக்​காக பேணிக் காக்​கும் முதன்​மை​யான தமிழ் ஆய்வு நிறு​வன​மாக விளங்​கு​வதே எங்​கள் நோக்​கம் ஆகும். அறி​வியல் ரீதியி​லான ஆய்​வு​களை உரு​வாக்கி தொழில் நுட்​பம் வழிநடத்​தும் சான்​றிதழ் மற்​றும் பட்​டப் படிப்​பு​கள் மூலம் வரும் தலை​முறை​யினரை கல்​வி​யில் உயர்த்த வேண்​டும். உலகம் முழுதும் உள்ள தமிழர்​களை இணைக்​கும் தன்​னிறை​வான ஓர் ஆய்வு நிறு​வனத்தை நிறு​வுவதே எங்​கள் நோக்​கம்.

உலகளா​விய தமிழர்​களை மைய​மாகக் கொண்டு செம்​மொழி மரபிலிருந்து இன்​றைய தற்​கால சிந்​தனை வரை -தமிழர் பண்​பாட்​டின் பன்​முக பரி​மாணங்​களை ஆய்ந்து போற்​றும் சிறப்பு மைய​மாக இந்த நிறு​வனம் விளங்​கும். ஆண்​டு​தோறும் தமிழ் மரபுக் கதைகளைக் கொண்டு தமிழ், ஆங்​கிலம் என இரண்டு மொழிகளி​லும் திரைப்​படங்​கள் தயாரிப்​பவர்​களுக்​கு விருது வழங்​கப்​படும்​. இவ்​வாறு அவர்​கள்​ தெரிவித்​தனர்​.

<div class="paragraphs"><p>தமிழ் மற்றும் புலம்பெயர் தமிழ் ஆய்வு நிறுவனம் சார்பில் வஞ்சி உலகத் தமிழ் மரபு திரைப்படதொடக்க விழா சென்னை விஐடி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற  விஐடி வேந்தர் கோ.விசுவநாதனுக்கு  நினைவு பரிசை புலம்பெயர் தமிழர் நிறுவன தலைவர் கலைமதி, துணைத் தலைவர் பாலா கண்ணன் வழங்கினர். உடன் பெண்​ணாடம் வள்ளலார் அறநிலையத்​தின் தலைவர் முத்துஜோதி, புலம்பெயர் தமிழர் ஆய்வு  நிறுவன துணை தலைவர் ரேவதி சுயம்புலிங்கம், தயாரிப்பாளர் மாலா மணியன். படம்:எம்.முத்துகணேஷ் </p></div>
“ராகுல் காந்தி பாஜகவின் பி-டீம்” - கேரள முதல்வர் பினராயி விஜயன் சாடல்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in