ஜன.2 முதல் 12-ம் தேதி வரை நடைபெறும் சமத்துவ நடைபயணத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார்: வைகோ தகவல்

நடைபயணத்துக்கான கொடியை அறிமுகம் செய்த வைகோ. | படம்: எல்.சீனிவாசன் |

நடைபயணத்துக்கான கொடியை அறிமுகம் செய்த வைகோ. | படம்: எல்.சீனிவாசன் |

Updated on
1 min read

சென்னை: மதி​முக சார்​பில் ஜன.2-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடை​பெறும் சமத்​துவ நடைபயணத்தை திருச்சியில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தொடங்கி வைக்கவுள்ளதாக அக்​கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் வைகோ தெரிவித்துள்​ளார்.

சென்​னை​யில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: மதி​முக சார்​பில் போதைப்​பொருள் ஒழிப்​பு, சாதி மோதல் தடுப்பு உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி என்​னுடைய தலை​மையி​லான சமத்​துவ நடைபயணம், 2026 ஜன.2-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை 11 நாட்​களுக்கு நடை​பெறுகிறது.

அதன்​படி 190 கி.மீ. வரை நடை​பெறும் நடைபயணத்​தை, திருச்​சி​யில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தொடங்கி வைத்​து, இந்​துக்​கள் வழிபடும் கோயில், கிறிஸ்​தவர்​கள் வழிபடும் தேவால​யம், இஸ்​லாமியர்​கள் வழிபடும் மசூ​தி, சீக்​கியர்​கள் வழிபடும் குருத்​வா​ராக்​கள் அடங்​கிய சின்​னங்​கள் பொருந்​திய சிவப்​பு, மஞ்​சள் நிற கொடியை எனக்கு வழங்​க​வுள்​ளார்.

இந்​நிகழ்​வில் தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை, மநீம கட்​சித் தலை​வர் கமல்​ஹாசன் உள்​ளிட்ட கூட்​ட​ணிக் கட்​சித் தலை​வர்​கள் பங்​கேற்க உள்​ளனர். சமத்துவ நடைபயணத்​துக்​காக மதி​முக தொண்​டரணி, இளைஞரணி, மாணவரணி​யில் இருந்து ஆயிரம் பேர் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர். இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

<div class="paragraphs"><p>நடைபயணத்துக்கான கொடியை அறிமுகம் செய்த வைகோ. | படம்: எல்.சீனிவாசன் |</p></div>
சென்னை தி.நகர் பாண்டி பஜாரில் தினமும் மதியம் 12 மணிக்கு இலவச உணவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in