

வைகோ
தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறினால் தென்மாநிலங்கள் ஆதரவு இல்லாமலேயே மத்திய அரசை பாஜக அமைத்துக் கொள்ளும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி மதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து அரச்சலூரில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது: திராவிட மாடல் ஆட்சியில் ஸ்டாலின் நிறைவேற்றிய திட்டத்தைப் போல, வேறெந்த மாநிலத்திலும் திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை.
தற்போது 4 மடங்கு மக்கள் தொகை உயர்ந்துவிட்டதாகவும், தொகுதி மறுவரையறைத் திட்டம் செயல்படுத்தினால், மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில் 888 எம்பிக்கள் வருவார்கள் என்றும் மத்திய அரசு சொல்கிறது.
தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறினால் வடமாநிலங்களில் 500-க்கும் மேலான உறுப்பினர்களை பெற்று, தென் மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்கள் ஆதரவு இல்லாமல் மத்திய அரசை பாஜக அமைத்து கொள்ள முடியும்.
இது மத்திய அரசின் பித்தலாட்டம். நல்லவேளையாக மூன்றில் இருபங்கு பெரும்பான்மை இல்லாமல், தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற முடியாமல் போனது. தமிழ்நாடு உரிமைகளையும், நலன்களையும் காக்க ஸ்டாலின் ஆட்சி நீடிக்க மக்கள் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.