ரூ.10 கோடியில் புனரமைக்கப்பட்ட ஆவண காப்பக கட்டிடம்: உதயநிதி திறந்துவைத்தார்

எழும்பூரில் புனரமைக்கப்பட்டுள்ள ஆவணக் காப்பகக் கட்டிடம், புதிய கண்காட்சி கூடத்தை நேற்று திறந்துவைத்துப் பார்வையிட்டார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். உடன், அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, கோவி.செழியன் மற்றும் இ.பரந்தாமன் எம்எல்ஏ, உயர் கல்வித்துறை செயலர் பொ.சங்கர் உள்ளிட்டோர்.

எழும்பூரில் புனரமைக்கப்பட்டுள்ள ஆவணக் காப்பகக் கட்டிடம், புதிய கண்காட்சி கூடத்தை நேற்று திறந்துவைத்துப் பார்வையிட்டார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். உடன், அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, கோவி.செழியன் மற்றும் இ.பரந்தாமன் எம்எல்ஏ, உயர் கல்வித்துறை செயலர் பொ.சங்கர் உள்ளிட்டோர்.

Updated on
1 min read

சென்னை: எழும்​பூரில் ரூ.10 கோடி​யில் புனரமைக்​கப்​பட்ட ஆவணக் காப்​பகத்​தின் பழமை​யான கட்​டிடம், ரூ. 15 லட்​சத்​தில் புதி​தாக அமைக்​கப்​பட்ட கண்​காட்​சிக் கூடம் ஆகிய​வற்றை துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் திறந்து வைத்​தார்.

இதுகுறித்​து, தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: உயர்​கல்​வித் துறை​யின் கீழ் செயல்​பட்டு வரும், தமிழ்​நாடு ஆவணக் காப்​பகம் மற்​றும் வரலாற்று ஆராய்ச்​சித் துறை தமிழகத்​தின் வரலாறு, பண்​பாடு மற்​றும் நிர்​வாகம் சார்ந்த அரிய ஆவணங்களைப் பாது​காத்து வரும் தனது சேவை​யில் நூறு ஆண்​டு​கள் கடந்து சாதனை படைத்து வரு​கிறது.

கடந்த 1909-ம் ஆண்டு மெட்​ராஸ் ரெக்​கார்டு ஆபீஸ் என்ற பெயரில் தொடங்​கப்​பட்​டு, 1973-ல் தமிழ்​நாடு வரலாற்று ஆராய்ச்சி ஆவணக் காப்பகம் என்று பெயர் மாற்​றம் செய்​யப்​பட்​டு, 2009-ம் ஆண்டு தனது 100-வது ஆண்டை நிறைவு செய்​தது. சுமார் 40 கோடி ஆவணங்​களை கொண்​டுள்ள இக்காப்பகம், ஆராய்ச்​சி​யாளர்​களின் மிகச் சிறந்த தேடல் களமாக உள்​ளது.

இந்​நிலை​யில், ரூ.10 கோடி மதிப்​பீட்​டில் புனரமைக்​கப்​பட்ட எழும்​பூரில் உள்ள தமிழ்​நாடு ஆவணக் காப்பகத்தின் பழமை​யான தலைமை அலு​வலக கட்​டிடம் மற்​றும் ரூ.15 லட்​சத்​தில் புதி​தாக அமைக்​கப்​பட்ட கண்​காட்​சிக் கூடம் ஆகிய​வற்றை துணை முதல்​வர்​ உதயநிதி ஸ்டா​லின் நேற்று திறந்து வைத்​தார்.

அத்​துடன், ஆவண காப்பகத்தில் பாது​காக்​கப்​பட்டு வரும் 100 வருடங்​கள் பழைமை​யான 10 லட்​சம் அரிய ஆவணங்​களை ஜப்​பானிய திசு முறை​யில் செப்​பனிட்​டுப் பாது​காக்​கும் பணி​களை​யும் தொடங்கி வைத்​தார்.

நவீன கண்​காட்​சிக் கூடத்​தில், வீர​பாண்​டிய கட்​டபொம்​மன் தூக்​கி​லிடப்​பட்​டதை விவரிக்​கும் ஆவணம், மெட்​ராஸ் ராஜ​தானி, தமிழ்​நாடு என பெயர் மாற்​றம் செய்​யப்​பட்ட ஆவணம், சென்​னையை எம்​டன் கப்​பல் தாக்​கியது குறித்த ஆவணம் உள்​ளிட்ட அரிய வரலாற்று ஆவணங்​கள் பொது​மக்​களும், மாணவர்​களும் பார்​வை​யிடும் வகை​யில் காட்​சிப்​படுத்​தப்​பட்​டுள்​ளன.

நிகழ்ச்​சி​யில், அமைச்​சர்​கள் பி.கே.சேகர்​பாபு, கோவி.செழியன், மாநக​ராட்சி மேயர் ஆர்​.பிரி​யா, உயர் கல்​வித்​துறை செயலர் பொ. சங்​கர், தமிழ்​நாடு ஆவணக் காப்பகம் மற்​றும் வரலாற்று ஆராய்ச்​சித் துறை ஆணை​யர் சு. மலர்​விழி உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

<div class="paragraphs"><p>எழும்பூரில் புனரமைக்கப்பட்டுள்ள ஆவணக் காப்பகக் கட்டிடம், புதிய கண்காட்சி கூடத்தை நேற்று திறந்துவைத்துப் பார்வையிட்டார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். உடன், அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, கோவி.செழியன் மற்றும் இ.பரந்தாமன் எம்எல்ஏ, உயர் கல்வித்துறை செயலர் பொ.சங்கர் உள்ளிட்டோர்.</p></div>
ராகுலுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in