ராகுலுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

ராகுலுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது
Updated on
1 min read

ஜெய்ப்பூர்: ​ராகுல் காந்தி உள்​ளிட்ட காங்​கிரஸ் எம்​.பி.க்​களுக்கு கொலை மிரட்​டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமூக ஊடகத்​தில் அண்​மை​யில் வெளி​யான ஒரு வீடியோ​வில் ஒருவர் தன்னை வலது​சாரி அமைப்​பான கர்னி சேனா​வின் செய்​தித் தொடர்​பாளர் ராஜ் சிங் என்று அறி​முகம் செய்​து​கொள்​கிறார்.

அவர் அந்த வீடியோ​வில், “சமீபத்​தில் முடிவடைந்த நாடாளு​மன்ற கூட்​டத்​தொடரில் மக்​களவை​யில் சபா​நாயகர் ஓம் பிர்​லாவை 25 காங்​கிரஸ் எம்​.பி.க்​கள் திட்​டிய​தால் பாஜக மற்​றும் கர்னி சேனா தொண்​டர்​கள் கோபம் அடைந்​துள்​ளனர். இது​போன்ற சம்​பவம் மீண்​டும் நடந்​தால் நாங்​கள் அந்த எம்​.பி.க்​களின் வீடு​களுக்​குள் நுழைந்து சேதப்​படுத்​து​வோம். இந்த சம்​பவம் ராகுல் காந்​தி​யின் உத்​தர​வின் பேரில் நடந்​த​தாக நான் நம்​பு​கிறேன்.

ராகுல், கவன​மாகக் கேளுங்​கள், இது​போன்ற சம்​பவம் மீண்​டும் நடந்​தால், நாங்​கள் உங்​கள் வீட்​டுக்​குள் நுழைந்து உங்​களைச் சுடு​வோம். அந்த எம்​.பி.க்​களை 24 மணி நேரத்​துக்​குள் கைது செய்​யா​விட்​டால் அனை​வரை​யும் சுட்​டுக் கொல்​வோம்" என்று மிரட்​டல் விடுத்​திருந்​தார். இது தொடர்​பாக ராஜ் சிங்கை ராஜஸ்​தான் போலீ​ஸார் பிடித்து விசா​ரித்து வரு​கின்​றனர்.

ராகுலுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது
சென்னை | இளம் பெண்ணிடம் போட்டோ ஷூட் எடுப்பதாக நகை திருடிய பிசியோ தெரபிஸ்ட் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in