தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 584 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் திறப்பு

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 584 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் திறப்பு

Published on

சென்னை: தமிழ்​நாடு நகர்ப்​புற வாழ்​விட மேம்​பாட்டு வாரி​யத்​தின் சார்​பில் எழும்​பூர், மயி​லாப்​பூர் பகு​தி​களில் கட்​டப்​பட்ட 584 புதிய அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​களை துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் நேற்று திறந்து வைத்​து, பயனாளி​களுக்கு ஒதுக்​கீட்டு ஆணை​களை வழங்​கி​னார்.

சென்னை எழும்​பூர் சட்​டப்​பேரவை தொகு​திக்கு உட்​பட்ட வேம்​புலி அம்​மன் கோயில் திட்​டப்​பகு​தி​யில் 1976-ம் ஆண்டு 295 சதுர அடி​யில் தரை மற்​றும் 3 தளங்​களு​டன் கட்​டப்​பட்ட 144 குடி​யிருப்​பு​கள் சிதிலமடைந்து வாழத் தகு​தி​யற்ற நிலை​யில் இருந்​தன.

இதையடுத்து தமிழ்​நாடு நகர்ப்​புற வாழ்​விட மேம்​பாட்டு வாரி​யம் சார்​பில் மறுகட்​டு​மான திட்​டத்​தின் கீழ் அதே பகு​தி​யில் 9 தளங்​களு​டன் ரூ.32.63 கோடி செல​வில் 188 புதிய அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​கள் கட்​டப்​பட்​டன. அதே​போல் அனை​வருக்​கும் வீட்டு வசதி திட்​டத்​தின் கீழ் மயி​லாப்​பூர் சட்​டப்​பேரவை தொகு​திக்கு உட்​பட்ட சீனி​வாசபுரம் திட்​டப்​பகு​தி​யில் ரூ.57.07 கோடி செல​வில் 14 தளங்​களு​டன் 396 புதிய அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​கள் கட்​டப்​பட்​டுள்​ளன.

இந்த குடி​யிருப்​பு​கள் ஒவ்​வொன்​றும் தலா 400 சதுரஅடி பரப்​பளவுடன் ஒரு பல்​நோக்கு அறை, படுக்கை அறை, சமையல் அறை மற்​றும் கழி​ப்பறை ஆகிய வசதி​களு​டன் கட்​டப்​பட்​டுள்​ளன. அந்​த வகை​யில் ரூ.89.70 கோடி​யில் கட்​டப்​பட்​டுள்ள இந்த புதிய 584 அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​களை துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், சென்னை ஹாரிங்​டன் சாலை​யில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் திறந்​து ​வைத்​து, குடி​யிருப்​பு​களுக்​கான ஒதுக்​கீட்டு ஆணை​களை பயனாளி​களுக்கு வழங்​கி​னார்.

அதைத்​தொடர்ந்​து, தமிழ்​நாடு நகர்ப்​புற வாழ்​விட மேம்​பாட்டு வாரி​யம் சார்​பில் துறை​முகம் பி.ஆர்​.என்​.​கார்​டனில் ரூ.85.68 கோடி​யில் கட்​டப்​பட்டு வரும் 501 அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​கள், எல்​லீஸ்​புரத்​தில் ரூ.15.29 கோடி​யில் கட்​டப்​பட்டு வரும் 85 அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​கள், ராயபுரம் செட்​டித் தோட்​டத்​தில் ரூ.45.36 கோடி​யில் கட்​டப்​பட்டு வரும் 243 அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​கள், ஸ்டான்லி அரசு மருத்​து​வ​மனை சாலை​யில் சிஎம்​டிஏ சார்​பில் ரூ.132 கோடி​யில் கட்​டப்​பட்டு வரும் 776 புதிய அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​களின் கட்​டு​மான பணி​களை ஆய்வு செய்​தார்.

இந்​நிகழ்​வு​களில் அமைச்​சர்​கள் தா.மோ.அன்​பரசன், பி.கே.சேகர்​பாபு, எம்​.பி.க்​கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்​க​பாண்​டியன், மேயர் பிரி​யா, வீட்​டு​வசதி மற்​றும் நகர்ப்​புற வளர்ச்​சித் துறை செயலர் காகர்லா உஷா, தமிழ்​நாடு நகர்ப்​புற வாழ்​விட மேம்​பாட்டு வாரிய மேலாண் இயக்​குநர் ஸ்ரேயா பி.சிங், எம்​எல்​ஏக்​கள் தாயகம் கவி, த.வேலு, இ.பரந்​தாமன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்​.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 584 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் திறப்பு
சீனர்களுக்கு சுற்றுலா விசாவுக்கான தடையை நீக்கியது இந்தியா

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in