

அம்ரித் பாரத் ரயில் | கோப்புப்படம்
சென்னை: மேற்குவங்கம் நியூ ஜல்பைகுரி - நாகர்கோவில், நியூ ஜல்பைகுரி - திருச்சி இடையே என 2 அம்ரித் பாரத் ரயில் சேவைகள் நேற்று தொடங்கி வைக்கப்பட்டன. இதன் விவரம் வருமாறு:
நியூஜல்பைகுரி - நாகர்கோவில் அம்ரித் பாரத் ரயிலில் 8 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள், 11 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ரயில் நியூஜல்பைகுரியில் புறப்பட்டு பாலசோர், கட்டாக், புவனேஸ்வர், விஜயவாடா, கூடூர், ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழநி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக நாகர்கோவிலை அடையும். இந்த ரயிலின் முதல் சேவை நாகர்கோவிலில் இருந்து ஜன.25-ம் தேதியும் நியூஜல்பைகுரியில் இருந்து ஜன.28-ம் தேதியும் தொடங்கும்.
நியூஜல்பைகுரி - திருச்சி அம்ரித் பாரத் ரயில் நியூஜல்பைகுரியில் புறப்பட்டு பாலசோர், கட்டாக், புவனேஸ்வர், விஜயவாடா, கூடூர், சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக திருச்சியை அடையும். இந்த ரயிலின் முதல் சேவை திருச்சியில் ஜன.28-ம் தேதியும், நியூ ஜல்பைகுரியில் இருந்து ஜன.30-ம் தேதியும் தொடங்கும்.