எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தால் பல கோடி ரூபாய் தருவதாக திமுக பேரம்: தவெக எம்எல்ஏ சரவணன் குற்றச்சாட்டு

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தால் பல கோடி ரூபாய் தருவதாக திமுக பேரம்: தவெக எம்எல்ஏ சரவணன் குற்றச்சாட்டு
Updated on
1 min read

தூத்துக்குடி: எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்​து​விட்டு திமுக​வில் இணை​யு​மாறு திமுக​வினர் தன்​னிடம் பல கோடி ரூபாய் பேரம் பேசி​ய​தாக, ஸ்ரீவை​குண்​டம் தொகுதி தவெக எம்​எல்ஏ சரவணன் குற்​றம்​சாட்​டி​யுள்​ளார்.

தூத்​துக்​குடி மாவட்​டம், ஏரலில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது:

ஸ்ரீவை​குண்​டத்தில் நான் வெற்றி பெற்​றதை தொடர்ந்து அரசி​யல் காழ்ப்​புணர்ச்சி காரண​மாக திமுக, அதி​முக, பாஜக​வினர் கூட்டு சேர்ந்து சமூக வலை​தளங்​கள் மூலம் என் மீது பல குற்​றச்​சாட்​டு​களை தெரி​வித்து வரு​கின்​றனர்.

மேலும், எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்து விட்​டு, திமுக​வில் சேரு​மாறு சிலர் என்​னிடம் தொடர்ந்து கூறி வரு​கின்​றனர். திருநெல்​வேலியைச் சேர்ந்த ஒரு தியேட்​டர் உரிமை​யாளர் மற்​றும் முன்​னாள் அமைச்​சர் அனிதா ராதாகிருஷ்ணனுடன் இருப்​பவர்​கள் என்​னிடம் பேரம் பேசினர். ‘தி​முக​வில் சேர்ந்​தால் ரூ.50 கோடிக்கு மேல் பணம், திமுக அரசு அமைந்​தால் அமைச்​சர் பதவி தரு​கிறோம். ராஜி​னாமா செய்​யா​விட்டால் உங்​களை என்ன செய்​வோம் என்று தெரி​யாது’ என மிரட்​டல் விடுக்​கின்​றனர்.

சில நாட்​களுக்கு முன்பு எனது வாக​னம் விபத்​துக்கு உள்​ளான​தி​லும் அவர்​களது பங்கு இருக்​குமோ என்ற சந்​தேகம் எழுகிறது.

ஸ்ரீவை​குண்​டம் தொகு​திக்கு உட்​பட்ட பகு​தி​களில் திமுக மற்​றும் அதி​முக​வினர் பல்​வேறு ஊழல் சம்​பவங்​களில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். இதனால், மக்​கள் பணி​யில் ஈடு​பட்​டுள்ள என்னை எப்​படி​யா​வது தடுக்க வேண்​டும் என அவர்​கள் கூட்​டணி சேர்ந்து எனக்கு எதி​ராக செயல்​பட்டு வரு​கின்​றனர். இதற்​கெல்​லாம் நான் அடிபணிய மாட்​டேன். இவ்​வாறு அவர் கூறி​னார்.

பேட்​டி​யின்​போது திமுக​வினர் தன்​னிடம் பேரம் பேசி​யதற்​கான ஆடியோ ஆதா​ரம் ஒன்​றை​யும் அவர் வெளி​யிட்​டார். அதில், சரவணனிடம் பேசிய ஒரு நபர் 'நாம் நட்பு ரீதி​யாக பேசிக் கொள்​ளலாம்’ என்று கூறுகிறார். அதற்கு சரவணன், ‘எனக்கு 50, 100 அல்ல, 500 கோடி கொடுத்​தா​லும் இது​மா​திரி​யான செயல் பிடிக்​காது. யாருக்​கும் நான் துரோகம் செய்​ய​மாட்​டேன். இருக்​கிற இயக்​கத்​தில் உறு​தி​யாக இருப்​பேன்' என பதிலளிக்​கிறார்.

ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவைத் தொடர்ந்து இவரும் குதிரை பேர சதி நடப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தால் பல கோடி ரூபாய் தருவதாக திமுக பேரம்: தவெக எம்எல்ஏ சரவணன் குற்றச்சாட்டு
ராணுவம், கடற்படை, விமானப்படையில் 50% முதல் 75% அக்னி வீரர்களை நிரந்தரமாக்க திட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in