தென் மாவட்டங்களில் நாளை முதல் சசிகலா பிரச்சாரம்

தென் மாவட்டங்களில் நாளை முதல் சசிகலா பிரச்சாரம்
Updated on
1 min read

சென்னை: அதி​முக ஒருங்​கிணைப்பு முயற்​சி​யில் ஈடு​பட்டு வந்த சசிகலா, இறு​தி​யாக அனைத்​திந்​திய புரட்​சித் தலை​வர் மக்​கள் முன்​னேற்​றக் கழகம் என்ற புதிய கட்​சியை தொடங்​கி​னார்.

இக்​கட்​சி, இந்த தேர்​தலில் பாமக நிறு​வனர் ராம​தாஸுடன் கூட்​டணி அமைத்து போட்​டி​யிடு​கிறது. சசிகலா இது​வரை 5 கட்​டங்​களாக 80 வேட்​பாளர்​களை அறி​வித்​துள்​ளார்.

இன்​றுடன் வேட்​புமனு தாக்​கல் நிறைவடை​யும் நிலை​யில் நாளை (ஏப்​.7) பிரச்​சா​ரத்தை தொடங்​கு​கிறார்.

இது தொடர்​பாக கட்சி தலைமை அலு​வல​கம் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: அனைத்​திந்​திய புரட்​சித் தலை​வர் மக்​கள் முன்​னேற்​றக் கழக பொதுச்​செய​லா​ளர் சசிகலா, இன்று முதல் 10-ம் தேதி வரை, இக்​கட்சி சார்​பில் போட்​டி​யிடும் வேட்​பாளர்​களை ஆதரித்து பிரச்​சா​ரம் மேற்​கொள்​கிறார்.

அதன்​படி நாளை, திருப்​பரங்​குன்​றம், மதுரை மத்​தி, திரு​மங்​கலம், சோழ​வந்​தான், உசிலம்​பட்​டி, ஆண்​டிபட்டி தொகு​தி​களி​லும், 8-ம் தேதி போடி, நிலக்​கோட்​டை, திண்​டுக்​கல், மேலூர், தொகு​தி​களி​லும், 9-ம் தேதி சிவகங்​கை, மானாமதுரை, திருச்​சுழி, அருப்​புக்​கோட்​டை, சாத்​தூர் தொகு​தி​களி​லும், 10-ம் தேதி சிவ​காசி, ஸ்ரீவில்​லிப்​புத்​தூர், ராஜ​பாளை​யம், வாசுதேவநல்​லூர், சங்​கரன்​கோ​வில் ஆகிய தொகு​தி​களி​லும் பிரச்​சா​ரம் மேற்​கொள்​கிறார். இவ்​வாறு அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது.

தென் மாவட்டங்களில் நாளை முதல் சசிகலா பிரச்சாரம்
திருப்பரங்குன்றம் கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in