எ.வ.வேலுவுக்கு எதிரான லுக்-அவுட் நோட்டீசுக்கு விதித்த தடையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு

உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை
எ.வ.வேலு | கோப்புப்படம்

எ.வ.வேலு | கோப்புப்படம்

Updated on
1 min read

புதுடெல்லி: தமிழகத்​தில் ஒருங்​கிணைந்த சாலை உள்​கட்​டமைப்பு மேம் பாட்​டுத் திட்​டத்​தின் கீழ் சாலை களை மேம்​படுத்த ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்​கப்​பட்​டிருந்​தது.

எந்த இடத்​தி​லும் பணி​களே நடைபெறாத நிலை​யில், முன்​கூட்​டியே தனி​யார் ஒப்​பந்​த​தா​ரர்​களுக்கு கோடிக்​கணக்​கில்தொகை விடுவிக்​கப்​பட்டு முறை​கேடு நடந்​துள்​ள​தாக அறப்​போர் இயக்​கம் சார்​பில் லஞ்ச ஒழிப்​புத் துறை​யில் கடந்த 2022-ம் ஆண்டு புகார் அளிக்​கப்​பட்​டது.

எ.வ.வேலு மற்​றும் தொடர்​புடைய​வர்​களின் வீடு​களில் கடந்த ஜூன் 25-ம் தேதி லஞ்ச ஒழிப்​புத் துறை​யினர் சோதனை நடத்தினர். அடுத்த நாளான 26-ம் தேதி எ.வ.வேலு மருத்​துவ சிகிச்​சைக்​காக சிங்​கப்​பூரில் உள்ள மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ள​தாகக் கூறப்​பட்ட நிலை​யில், அவரைத் தேடப்​படும் நபராக அறி​வித்து போலீ​ஸார் லுக்​-அவுட் நோட்​டீஸ் பிறப்​பித்​தனர்.

தனக்கு எதி​ரான வழக்​கை​யும், லுக்​-அவுட் நோட்​டீஸையும் ரத்து செய்​யக் கோரி எ.வ.வேலு தாக்​கல் செய்த மனுவை விசா​ரித்த சென்னை உயர் நீதி​மன்​றம், இந்த வழக்​கில் லஞ்ச ஒழிப்​புத் துறை போலீ​ஸார் ஜூலை 27-ம் தேதிக்​குள் பதில் அளிக்க வேண்​டும். அது​வரை மனு​தா​ரருக்கு எதி​ராக போலீ​ஸார் கடும் நடவடிக்கை எது​வும் எடுக்​கக்கூடாது. லுக்​-அவுட் நோட்​டீஸ் விவ​காரத்​தில் எ.வ.வேலு லஞ்ச ஒழிப்​புத் துறை அதி​காரி​கள் முன்பு ஜூலை 15-ம் தேதி விசா​ரணைக்கு ஆஜராக வேண்​டும்”என்று நிபந்​தனை விதித்​தது. மேலும் லுக்​-அவுட் நோட்​டீஸுக்கு இடைக்​காலத் தடை விதித்​தது.

இந்த உத்​தரவை ரத்து செய்​யக் கோரி தமிழ்​நாடு லஞ்ச ஒழிப்​புத்​துறை சார்​பில் வழக்​கறிஞர் விருந்தா பண்​டாரி உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு மனு தாக்​கல் செய்​தார். உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் தலை​மையி​லான அமர்வு முன் தமிழ்​நாடு அரசின் கூடு​தல் தலைமை வழக்​கறிஞர் பிரசந்தோ சந்​திர சென் ஆஜராகி, முன்​னாள் அமைச்​சர் எ.வ. வேலுவை கைது செய்​யக் கூடாது என்ற பொருளில் பொது​வான உத்​தரவை உயர்​நீ​தி​மன்​றம் தெளிவு இல்​லாமல் பிறப்​பித்​துள்​ளது.

மேல்​முறை​யீடு மனுவை செவ்​வாய்​கிழமை (இன்​று) விசா​ரிக்க வேண்​டும் என்று முறை​யிட்​டார். உயர் நீதி​மன்ற உத்​தர​வில் தெளிவு பெற உயர் நீதி​மன்​றத்​தையே நாடலாம் என்று முதலில் தெரி​வித்த தலைமை நீதிப​தி, பின்​னர் தமிழ்​நாடு அரசின் மனுவை புதன்​கிழமை (நாளை) விசா​ரிப்​ப​தாகத் தெரி​வித்​தார். இதனிடையே, தமிழ்​நாடு அரசின் மேல்​முறை​யீடு மனுவை விசா​ரிக்​கும் தனது தரப்பு கருத்​தைக் கேட்​காமல் எவ்​வித உத்​தர​வை​யும் பிறப்​பிக்​கக் கூடாது என்று குறிப்​பிட்டு எ.வே.வேலு சார்​பில் வழக்​கறிஞர்​ டி.குமணன்​ கேவியட்​ மனு தாக்​கல்​ செய்து​உள்​ளார்​.

<div class="paragraphs"><p>எ.வ.வேலு | கோப்புப்படம்</p></div>
73,000 குடும்பங்களுக்கு ரேஷன் அட்டை: பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in