திருப்பூரில் விவசாயிகள் மறியல்; பெண்கள் தீக்குளிக்க முயற்சி: விளைநிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்க எதிர்ப்பு

விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் பதிக்க எதிர்ப்புத் தெரிவித்து, திருப்பூர் அருகே வேலம்பட்டியில் நேற்று நடந்த மறியல் போராட்டத்தின்போது, தீக்குளிக்க முயன்ற பெண்களை தடுத்து நிறுத்திய போலீஸார்.

விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் பதிக்க எதிர்ப்புத் தெரிவித்து, திருப்பூர் அருகே வேலம்பட்டியில் நேற்று நடந்த மறியல் போராட்டத்தின்போது, தீக்குளிக்க முயன்ற பெண்களை தடுத்து நிறுத்திய போலீஸார்.

Updated on
1 min read

திருப்பூர்: ​விளைநிலங்​களில் எண்​ணெய் குழாய் பதிப்​ப​தற்கு எதிர்ப்பு தெரி​வித்​து, திருப்​பூர் அருகே வேலம்​பட்டி பகு​தி​யில் நூற்​றுக்​கும் மேற்​பட்ட விவ​சாயிகள் நேற்று சாலை மறியல் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.4 பெண்​கள் தீக்​குளிக்க முயன்​ற​தால், போலீ​ஸாருக்​கும் விவ​சா​யிகளுக்​கும் தள்​ளு​முள்ளு ஏற்​பட்​டது.

பாரத் பெட்​ரோலி​யம் நிறுவனம் சார்​பில் கோவை மாவட்டம் இரு​கூர் முதல் கர்​நாடக மாநிலம் தேவனகுந்தி வரை 340 கிமீ தொலை​வுக்கு பூமிக்​கடி​யில் எண்​ணெய் குழாய் அமைக்​கும் திட்​டம் செயல்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. இத்​திட்​டத்​தில், திருப்​பூர் மாவட்​டம் முத்​தூரிலிருந்து கர்​நாடக எல்லை வரை நெடுஞ்​சாலை வழி​யாகவே குழாய்​கள் பதிக்​கப்​படு​கின்​றன.

ஆனால், இரு​கூரிலிருந்து முத்​தூர் வரையி​லான 70 கிமீ தூரத்​துக்கு மட்​டும், நெடுஞ்​சாலை​யைத் தவிர்த்​து, விவ​சா​யிகளின் எதிர்ப்பை மீறி விளை நிலங்​கள் வழி​யாக குழாய் பதிக்​கும் பணி​கள் தொடங்​கப்​பட்​டுள்​ளன. இதைக் கண்​டித்​து, திருப்​பூர் - தாராபுரம் பிர​தான சாலை​யில் உள்ள வேலம்​பட்டி டோல்​கேட் பகு​தி​யில் நூற்​றுக்​கும் மேற்​பட்ட விவ​சா​யிகள் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடு​பட்​டனர்.

அப்​போது, 4 பெண் விவ​சா​யிகள் தங்​களது உடலில் மண்​ணெண்​ணெயை ஊற்​றி தீ வைக்க முயன்​றனர். போலீ​ஸார், அவர்​களைத் தடுத்​தனர். இதனால் அங்கு தள்​ளு​முள்ளு ஏற்பட்டது. இதையடுத்​து, அனை​வரை​யும் போலீ​ஸார் வலுக்​கட்​டாய​மாகக் கைது செய்​தனர்.

பாதிக்​கப்​பட்ட விவ​சா​யிகள் செய்​தி​யாளர்​களிடம் கூறுகை​யில், “முதல்​வர் இந்த விவ​காரத்​தில் தலை​யிட வேண்டும். குழாய் பதிக்க நெடுஞ்சாலைப் பாதையைப் பயன்​படுத்​து​வது குறித்து பேச வேண்​டும். அது​வரை இத்​திட்​டத்தை நிறுத்த வேண்​டும். இல்​லா​விட்​டால்​ போ​ராட்​டம்​ தொடரும்​” என்​றனர்​.

<div class="paragraphs"><p>விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் பதிக்க எதிர்ப்புத் தெரிவித்து, திருப்பூர் அருகே வேலம்பட்டியில் நேற்று நடந்த மறியல் போராட்டத்தின்போது, தீக்குளிக்க முயன்ற பெண்களை தடுத்து நிறுத்திய போலீஸார்.</p></div>
“தமிழக முதல்வர் விஜய் இப்போதைக்கு கர்நாடகாவுக்கு வர வேண்டாம்” - டி.கே.சிவகுமார் வேண்டுகோள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in