“சென்னையில் ஒரே நாளில் 3 பாலியல் குற்றங்கள்... திறனற்ற திமுக ஆட்சி!” - நயினார் நாகேந்திரன்

 நயினார் நாகேந்திரன்.

நயினார் நாகேந்திரன்.

Updated on
1 min read

சென்னை: “சென்னையில் ஒரே நாளில் மூன்று பாலியல் குற்றங்கள் நடந்துள்ளது. தொடர்ந்து ஒரு வார காலமாக நடக்கும் கொடூரங்களே, திமுக ஆட்சியின் திறனற்ற நிர்வாகத்துக்கு சாட்சி” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘விடிந்தால் ஒரு பாலியல் வன்கொடுமை செய்தி வரும் விடியா திமுக ஆட்சியில், இன்று காலையிலேயே சென்னையில் மட்டும் 14 வயது பள்ளி மாணவிக்குப் பாலியல் வன்கொடுமை, ப்ராஜெக்ட் தொடர்பாக சென்னை வந்த கல்லூரி மாணவிக்குப் பாலியல் வன்கொடுமை, தையல் கடையில் 19 வயது பெண்ணுக்குப் பாலியல் தொல்லை என மூன்று செய்திகள் வந்திருக்கின்றன.

இந்தப் பதிவை எழுதும் போதே தமிழகத்தின் எந்த மூலையில், எந்தப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருகிறாரோ என யோசிக்கையில் ஈரக்குலை நடுங்குகிறது. தொடர்ந்து ஒரு வார காலமாக நடக்கும் கொடூரங்களே, கேடுகெட்ட திமுக ஆட்சியின் திறனற்ற நிர்வாகத்திற்கு சாட்சி.

எனவே, தமிழகத்தைப் பெண்கள் வாழத் தகுதியற்ற மாநிலமாக மாற்றிய திமுகவைத் துரத்தியடிப்போம். தமிழக மகளிரைக் காப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p> நயினார் நாகேந்திரன்.</p></div>
எரிபொருள் தட்டுப்பாடு அச்சம் வேண்டாம்: பொது மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in