“தவெக அமைச்சரவையில் இருந்து எந்த நேரத்திலும் வெளியேறுவோம்” - திருமாவளவன் கருத்து

திருமாவளவன் | கோப்புப் படம்

திருமாவளவன் | கோப்புப் படம்

Updated on
2 min read

சென்னை: தவெக அமைச்​சர​வை​யில் இடம்​பெற்​று​விட்​டோம் என்ற காரணத்​தி​னாலேயே, அக்​கட்​சி​யுடன் கூட்​டணி சேர்ந்​து​விட்​டோம் என்று பொருள் கிடை​யாது. நாங்​கள் இன்​னும் கூட்​ட​ணியை உரு​வாக்​கிக் கொள்​ள​வில்​லை. எந்த நேரத்​தி​லும் அமைச்​சர​வை​யில் இருந்​து​கூட நாங்​கள் வெளியே வரலாம் என்று விசிக தலை​வர் திரு​மாவளவன் தெரி​வித்​தார்.

இதுகுறித்து தனி​யார் தொலைக்​காட்சி நிகழ்ச்​சி​யில் அவர் பேசி​ய​தாவது: தமிழகத்​தில் ஆட்சி அமைக்க தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யின் ஆதர​வைப் பெறாமல், மதச்​சார்​பற்ற சக்​தி​களை அழைக்க தவெக முடிவு எடுத்​தது. இந்த யுக்​தியை அனை​வரும் பாராட்​டு​கின்​றனர். தவெக​வுக்கு நிபந்​தனையற்ற ஆதரவு அளிக்க இடது​சா​ரி​கள் முடிவு செய்​தன. வெளி​யில் இருந்து ஆதரவு என்ற முடிவையே விசிக உயர்​நிலைக் குழு கூட்​டத்​தில் நான் வலி​யுறுத்​தினேன். ஆனால், அமைச்​சர​வை​யில் பங்​கேற்க வேண்​டும் என எங்​கள் கட்​சி​யினர் வலி​யுறுத்​தினர்.

தமிழகத்​தில் இது​போன்ற வாய்ப்பு அமைவது கற்​பனை​யிலும் நடக்​காது. பல மாநிலங்​களில் ஏற்​கெனவே பட்​டியலினத்​தவர்​கள் துணை முதல்​வர்​களாக உள்​ளனர். இந்த சூழலில், இப்​படி வரும் வாய்ப்பை பயன்​படுத்​து​வ​தில் தவறு இல்லை என கம்​யூனிஸ்ட் கட்​சி​யினரும், திமுக​வில் ஒரு சிலரும் கூறினர்.

இதையடுத்​து, ஆதவ் அர்​ஜு​னாவை அழைத்து ஆதர​வுக் கடிதம் கொடுத்​த​போது, ‘‘அமைச்​சர​வை​யில் நீங்​கள் இடம்​பெற வேண்​டும்’’ என்​றார். அதற்​கு, ‘‘அமைச்​சர​வை​யில் இடம்​பெற விருப்​பம் இல்​லை. வெளி​யில் இருந்து ஆதரவு தரு​கிறோம். அமைச்​சரவை குறித்து பிறகு பேசலாம்’’ என்​றேன். இதையடுத்​து, வன்​னியரசை அமைச்​ச​ராக்க முடிவு செய்து அறி​வித்​தேன்.

அதற்கு சில நாட்​களுக்கு முன்பு எங்​கள் கட்சி பொதுச் செய​லா​ளர் ரவி​கு​மார், எனக்கு துணைமுதல்​வர் பதவி கொடுக்க வேண்​டும் என பேசி​யுள்​ளார். அது எனக்கு தெரி​யாது. இது குறித்து முதல்​வர் விஜய் என்​னிடம் பேசி​னார். அப்​போது, ‘‘துணை முதல்​வர் பதவி என்​பது எங்​கள் திட்​டத்​தில் இல்​லை. ஆனால், நீங்​கள் அமைச்​சர​வை​யில் இடம்​பெற வேண்​டும்’’ என்​றார். அப்​போதும் மறுத்​தேன்.

பின்​னர், ரவி​கு​மார் பேசி​யது குறித்து அறிந்​தவுடன் ஆதவ் அர்​ஜு​னா​விடம் உடனே பேசி என் பெயரை சேர்க்க வேண்​டாம் என உறு​தி​யாக கூறினேன்.

தவெக​வுக்கு நாங்​கள் ஆதரவு அளிக்​கும் விவ​காரத்​தில் திமுக​வும் நெகிழ்​வுத்​தன்​மை​யுடன் இருந்​தது எங்​களுக்கு அதிர்ச்​சி​யாக இருந்​தது. ‘நம் கூட்​ட​ணிக்கு ஆதர​வானவர்​கள்​தான் தவெகவை எதிர்த்து வாக்​களித்​துள்​ளனர். எனவே, தவெக​வுக்கு விசிக, இடது​சா​ரி​கள் ஆதரவு தரக்​கூ​டாது’ என திமுக கூறி​யிருக்க வேண்​டும். ஆனால், திமுக அதை செய்​ய​வில்​லை.

‘ஏற்​கெனவே இடது​சா​ரி​கள் வெளி​யில் இருந்து ஆதரவு அளிப்​ப​தாக அறி​வித்​துள்​ளன. திரு​மாவளவனும் அதே முடிவை எடுப்​பது எந்த நேரத்​தி​லும் பிரச்​சினை​தான். திடீரென ஆதரவை அவர் திரும்​பப் பெற்​றால் என்ன செய்​வது. ஆதரவு அளிப்​ப​தாக கூறிக்​கொண்டே திமுக கூட்​ட​ணி​யில் தொடர்​வ​தாக அவர் பேசுகிறா​ரா’ என்​றெல்​லாம் தவெக​வினர் கவலை கொண்​டனர். தவெக​வின் சந்​தேகத்தை போக்​கத்​தான் ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்​தோம், அதற்கு பரி​சாக தவெக அமைச்​சர​வை​யில் எங்​களுக்கு இடம் தரப்​பட்​டது.

அதே​நேரம், அமைச்​சர​வை​யில் இடம்​பெற்​று​விட்​டோம் என்​ப​தாலேயே, தவெக கூட்​ட​ணி​யில் சேர்ந்​து​விட்​டோம் என்று பொருள் கிடை​யாது. நாங்​கள் இன்​னும் கூட்​ட​ணியை உரு​வாக்​கிக் கொள்​ள​வில்​லை. இது​தான் உண்​மை. எந்த நேரத்​தி​லும் நாங்​கள் அமைச்​சர​வை​யில் இருந்​து​கூட வெளியே வரலாம். வரமுடி​யாதுஎன்​ப​தற்கு என்ன இருக்​கிறது. அப்​படி அரசி​யல் செய்ய முடி​யும். அப்​படி ஒரு நிலைப்​பாட்​டை​யும் எங்​களால் எடுக்க முடி​யும். திமுக - அதி​முக இணைந்து ஆட்​சி​யமைப்​பது குறித்து ஒரு கருத்து நில​வுவ​தாக திமுக தலை​வர் எங்​களிடம் கூறி​னாரே தவிர, திமுக - அதி​முக இணைந்து ஆட்​சி​யமைக்​கலாம் என கூற​வில்​லை.

அதற்​காக, திமுக - அதி​முக இணைவது குறித்த கருத்தே தவறு என கூற முடி​யாது. ஆதவ் அர்​ஜு​னா​விடம் ரூ.300 கோடி வாங்​கிய​தாக விமர்​சிக்​கின்​றனர். விசிக எழை எளிய மக்​களின் கட்​சி. திரு​மாவளவன் பணத்​துக்கு ஆசைப்​படு​கிறார்​ என கட்​டமைப்​பது அவதூறான குற்​றச்​சாட்​டு. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

<div class="paragraphs"><p>திருமாவளவன் | கோப்புப் படம்</p></div>
அணு ஆயுதத்தைக் கைவிட ஈரான் சம்மதம்: அமெரிக்காவுடன் விரைவில் அமைதி ஒப்பந்தம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in