காலி மதுபாட்டில் திரும்பப் பெறும் திட்டத்துக்கு தானியங்கி இயந்திரங்கள் வாங்க டெண்டர் அறிவிப்பு

காலி மதுபாட்டில் திரும்பப் பெறும் திட்டத்துக்கு தானியங்கி இயந்திரங்கள் வாங்க டெண்டர் அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: ​காலி மதுபாட்​டில் திரும்​பப் பெறும் திட்​டத்​துக்கு தானி​யங்கி இயந்​திரங்​களை கொள்​முதல் செய்ய டெண்​டர் அறி​விப்பு வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

வனப்​பகு​தி​கள் மற்​றும் சுற்​றுலாத்​தலங்​களில் காலி மது​பாட்​டில்​கள் வீசப்​படு​வ​தால், வனவிலங்​கு​கள் பாதிக்​கப்​படு​வது தொடர்​பான வழக்​கில் காலி மது​பான பாட்​டில்​களை திரும்ப பெறும் திட்​டத்தை நடை​முறைப்​படுத்த சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது. கடந்த ஆட்​சி​யில் காலி மது பாட்​டில் திரும்ப பெறும் திட்​டத்​துக்கு தனி​யாக பணி​யாளர்​களை நியமிக்​கப்​ப​தாக தெரிவிக்​கப்​பட்​டது.

தற்​போது தவெக அரசு பொறுப்​பேற்ற பின்​னர், காலி பாட்​டிலை திரும்​பப் பெற, தானி​யங்கி இயந்​திரங்​களை பயன்​படுத்த, டாஸ்​மாக் முடிவு செய்து ஒரு சில கடைகளில் சோதனை முயற்​சி​யாக பயன்​படுத்​தப்​பட்​டது. இந்த தானி​யங்கி இயந்​திரத்​தில், மது​பாட்​டிலில் உள்ள கியூஆர் குறி​யீடை ஸ்கேன் செய்​து, செல்​போன் எண், யுபிஐ பரிவர்த்​தனைக்​கான கியூஆர் குறி​யீடு மூலம் பணத்தை பெற்​றுக்​கொள்ள முடி​யும்.

இந்​நிலை​யில், இந்த இயந்​திரத்தை தமிழகம் முழு​வதும் டாஸ்​மாக் கடைகளில் நிறுவ டெண்​டர் கோரப் பட்​டுள்​ளது. வரும் 31-ம் தேதி ​முதல் விண்​ணப்​பங்களை ஆன்​லைனில் பெறலாம். செப்​.28ம் முதல் அக்​. 5-ம் தேதி காலை 11 மணி வரை ஒப்​பந்​த​புள்​ளி​களை சமர்​பிக்​கலாம். அக்​.5-ம் தேதி டெண்​டர் திறக்​கப்​படும் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. முதற்​கட்​ட​மாக நகர் பகு​தி​கள், அதிக வரு​வாய் கிடைக்​கும் கடைகளில் தானி​யங்​கி இயந்​திரங்​களை நிறு​வ முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

காலி மதுபாட்டில் திரும்பப் பெறும் திட்டத்துக்கு தானியங்கி இயந்திரங்கள் வாங்க டெண்டர் அறிவிப்பு
வெற்றி நோட்புக் முதல் வெற்றி உப்பு வரை: தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா வெளியிட்ட 23 அறிவிப்புகள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in