தமிழில் குடமுழுக்கு நடத்தக்கோரி மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முன்பு தமிழ் வேள்வியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

தமிழில் நடத்​த ஏற்​பாடு​கள் தயார் என அமைச்சர் தகவல்
தமிழில் குடமுழுக்கு நடத்தக்கோரி மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் வேள்வியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் நிர்மல்குமார். படம்: நா.தங்கரத்தினம்.

தமிழில் குடமுழுக்கு நடத்தக்கோரி மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் வேள்வியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் நிர்மல்குமார். படம்: நா.தங்கரத்தினம்.

Updated on
2 min read

மதுரை: மதுரை மீனாட்சி அம்​மன் கோயி​லில் தமிழில் குட​முழுக்கு நடத்த வேண்​டும் என கோயில் முன்பு தமிழ் வேள்​வி​யாளர்​கள் நேற்று காத்​திருப்​புப் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். இவர்​களோடு அமைச்​சர் நிர்​மல்​கு​மார் பேச்​சு​வார்த்தை நடத்தி கோயிலுக்​குள் அனு​ம​திப்​ப​தாக உறுதி அளித்​தார். இதுதவிர தமிழில் குடமுழுக்கு நடத்த ஏற்பாடுகள் நடப்பதாக அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.

மதுரை மீனாட்சி அம்​மன் கோயி​லில் தமிழில் குட​முழுக்கு நடத்த வேண்​டும், தமிழ் வேள்​வி​யாளர்​கள், அர்ச்​சகர்​கள், ஓது​வார்​கள் மூலம் தமிழில் மந்​திரங்​கள் ஓதி வேள்வி நடத்த வேண்​டும். யாக​சாலை, குட​முழுக்​கு, கரு​வறை​யில் தமிழில் வேள்வி​கள் நடத்த வேண்​டும் என தெய்​வத் தமிழ்ப் பேர​வை​யினர் உயர்நீதி​மன்​றத்​தில் வழக்​குத் தொடர்ந்​தனர்.

உயர் நீதி​மன்ற உத்​தர​வுப்​படி சம்​ஸ்​கிருதத்​துக்கு இணை​யாக தமிழில் வேள்வி நடத்த வேண்​டும் எனவும், தமிழில் வேள்வி நடத்​து​வதை ஆய்வு செய்ய அனு​ம​திக்க வேண்​டும் எனவும் வலியுறத்தி நேற்று முன்​தினம் சென்​னை​ இந்து சமய அறநிலை​யத் துறை ஆணை​யர் அலு​வல​கத்​தில் தெய்​வத்​தமிழ் பேர​வை​யினர் காத்​திருப்பு போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அங்கு நடந்த பேச்​சு​வார்த்​தை​யில், கவுதமன், சத்​தி​ய​பா​மா, தமிழ்​மணி, காயத்ரி அடங்​கிய தமிழ் வேள்​வி​யாளர்​கள், மதுரை மீனாட்சி அம்​மன் கோயில் இணை ஆணை​யர் க.செல்​லத்​துரையை சந்​திக்க அனு​மதி அளிப்பது என முடி​வெடுக்​கப்​பட்​டது.

அதன்​படி இவர்​கள் நேற்று அம்​மன் சந்​நிதி வழி​யாக கோயிலுக்​குள் செல்ல காவல் துறை​யினர் மற்​றும் கோயில் நிர்​வாகத்​தினர் மறுப்​புத் தெரி​வித்தனர். இதனால் கோயில் முன்பு சத்​தி​ய​பாமா தலை​மை​யில் தமிழ் வேள்​வி​யாளர்​கள் காத்​திருப்​புப் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். பின்பு இவர்​களோடு அமைச்​சர் நிர்​மல்​கு​மார் பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார். கோயிலுக்​குள் செல்ல அனு​மதி பெற்​றுத் தரப்​படும் என தெரி​வித்​தார்.

தமிழ் ஓதுவார்கள்: இந்நிலையில் மீனாட்​சி​ அம்​மன் கோயில் குட​முழுக்கு விழா ஏற்​பாடு​களை பார்​வை​யிட்ட பிறகு அமைச்​சர் ரமேஷ் கூறியது: குட​முழுக்கு விழா​வில் தமிழில் பாராயணம் செய்​வதற்கு தமிழகம் முழு​வதும் இருந்து 27 ஓது​வார்​களை நியமித்​துள்ளோம். முதல்​வர் எப்​போதும் தமிழை முன்​னிறுத்​தக் கூடிய​வர். தவெக ஆட்​சி​யில் தமிழுக்கு முக்​கி​யத்​து​வம் கொடுப்போம். அதன்​படி கடந்த 11-ம் தேதியி​லிருந்து ஓது​வார்​கள் தமிழில் மந்​திரங்​கள் ஓதி வரு​கின்றனர். தமிழில் குட​முழுக்கு நடத்​து​வதற்கு அனைத்து ஏற்பாடு​களும் செய்​யப்​பட்டுள்​ளன.

அரசால் நியமிக்​கப்​பட்ட ஓது​வார்​கள் யாரும் போராட்​டம் செய்​ய​வில்​லை. அவர்​கள் யாக​சாலை​யில் பணி​யாற்​றுகின்​றனர். கோபுரக் கலசத்​தில் நீர் ஊற்​ற​வும், கரு​வறைக்​குள் சென்று குட​முழுக்கு செய்​ய​வும் தமிழ் ஓது​வார்​கள் அனு​ம​திக்​கப்​படு​வார்​கள். இவ்வாறு கூறினார்.

அமைச்​சர் நிர்​மல்​கு​மார் கூறுகை​யில், அறங்​காவலர் குழு தலை​வர் மற்​றும் அறங்​காவலர்​களைத் தொடர்​பு​கொண்டு அவர்​களுக்கு எத்​தகைய ஆதரவு தேவை என்​பதை இணை ஆணை​யர் மூலம் கேட்​டறிந்து அவற்றை நிவர்த்தி செய்​வோம். குட​முழுக்கு விழா பாஸ் தொடர்​பாக பல தவறான தகவல்​கள் வரு​கின்​றன. இது​வரை நான் ‘பாஸ்​’களை கண்​ணால்​கூட பார்க்​க​வில்​லை. அதில் நான் தலை​யிடவே இல்​லை. கோயில் நிர்​வாகம் இணை ஆணையர் கட்​டுப்​பாட்​டில்​தான் உள்​ளது. அதில் நான் தலை​யிட​வில்​லை. சிட்​டிங் எம்​.பி., எம்​எல்​ஏக்​களுக்கு கோயில் நடை​முறைப்​படி பாஸ் கொடுக்​கப்​பட்​டுள்​ளது.

<div class="paragraphs"><p>தமிழில் குடமுழுக்கு நடத்தக்கோரி மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் வேள்வியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் நிர்மல்குமார். படம்: நா.தங்கரத்தினம்.</p></div>
“272 எம்பிக்கள் ஆதரவு இருப்பவரே பிரதமராக முடியும்” - கார்த்தி சிதம்பரம் எம்.பி.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in