தமிழகத்தில் ஆட்டோக்களுக்கு பிரத்யேக நம்பர் பிளேட் வழங்க புதிய திட்டம்

குற்றச்செயல்களை தடுக்க போக்குவரத்துத் துறை அதிரடி
தமிழகத்தில் ஆட்டோக்களுக்கு பிரத்யேக நம்பர் பிளேட் வழங்க புதிய திட்டம்
Updated on
2 min read

சென்னை: தமிழகம் முழு​வதும் விரை​வில் பழைய மற்​றும் புதிய ஆட்​டோக்​களுக்கு பிரத்​யேக நம்​பர் பிளேட் வழங்க நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​வ​தாக போக்​கு​வரத்​துத் துறை அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

சென்​னை​யின் பிர​தான போக்​கு​வரத்து சேவை​களை பூர்த்தி செய்​யும் வகை​யில் ஆட்​டோக்​கள் இயங்கி வரு​கின்​றன. மோட்​டார் வாக​னச் சட்​டத்​தின்​படி, ஒவ்​வொரு வாக​ன​மும் தெளி​வாகக் காணக்​கூடிய வகை​யில் பதிவு எண்ணை காட்​சிப்​படுத்த வேண்​டும்.

இது விபத்து அல்​லது குற்​றச் சம்​பவங்​களின்​போது வாக​னத்தை அடை​யாளம் காண மிக​வும் முக்​கிய​மான​தாகும். ஆனால் நம்​பர் பிளேட் இல்​லாமல் ஏராள​மான ஆட்​டோக்​கள் ஸ்டிக்​கர் மட்​டும் ஒட்​டிக்​கொண்டு மாநகரத்​தில் உலா வரு​கின்​றன. இதனால் போக்​கு​வரத்து கண்​காணிப்பு கேம​ராக்​கள் எளி​தில் பதிவுசெய்ய முடி​யாத சூழல் உரு​வாகி​யுள்​ளது.

வாக​னப் பதிவெண் தொடர்​பாக போக்​கு​வரத்​துத் துறை காவல் அதி​காரி கூறும்​போது, “கட்​டுப்​பாட்டை மீறி வேக​மாக செல்​லுதல், அனு​ம​தி​யில்​லாத இடங்​களில் வாக​னத்தை நிறுத்​துதல், சாலை விதி​களை மீறு​தல் போன்ற செயல்​களில் ஈடு​படும் ஆட்​டோக்​கள் மீது அபராதம் விதிக்​கப்​படு​கிறது. ஆர்​டிஓ மூல​மாக கொடுக்​கப்​பட்ட ஐஎன்டி ஹோலோகி​ராம் ஸ்டிக்​கர் கொண்ட நம்​பர் பிளேட்டை அகற்​றி​விட்டு சாதாரண ஸ்டிக்​கர் ஒட்​டு​வ​தால் உடனடி​யாக அந்த ஆட்​டோக்​களை சிசிடிவி கேம​ராக்​கள் மூலம் கண்​டறிவ​தில் சிரமம் ஏற்​படு​கிறது” என்​றார்.

ஆனால், போதிய அளவில் ஆட்​டோக்​களுக்கு நம்​பர் பிளேட் தரப்​பட​வில்லை என ஆட்டோ ஓட்​டுநர்​கள் தரப்​பில் குற்​றச்​சாட்டு வைக்​கப்​படு​கிறது. இதுகுறித்து, ஆட்டோ தொழிற்​சங்​கப் பிரிவு நிர்​வாகி கூறுகை​யில், “சென்​னை​யில் ஓடும் 1.20 லட்​சம் ஆட்​டோக்​களில் 75% பழைய ஆட்​டோக்​கள்​தான். தற்​போது வரை பழைய ஆட்​டோக்​களுக்கு நம்​பர் பிளேட் வழங்​கப்​பட​வில்​லை.

யாரோ ஒருசிலர் மட்​டுமே குற்​றச்​சம்​பங்​களில் ஈடு​படு​கின்​றனர். எங்​களின் பிர​தான கோரிக்​கை யே பழைய வாக​னங்​களுக்​கும் நம்​பர் பிளேட் வழங்​கப்பட வேண்​டும். பர்​மிட், ஆவணங்​கள் உரிமம் பெறு​வது உள்​ளிட்​ட​வற்​றில் கால​தாமதத்தை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்​டும்” என்​றார்.

விதி​மீறல் வாக​னங்​கள்: போக்குவரத்து ஆணையரகம் மூலமாக கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களின் போக்குவரத்து விதிகளை மீறியதாக கார், ஆட்டோ மற்றும் லாரி போன்ற வானகங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

ஆட்டோ ஓட்​டுநர் தரப்பு புகார் குறித்து போக்​கு​வரத்து ஆணை​யரக உயர் அதி​காரி கூறும்​போது, “வி​தி​முறை​களை மீறி இயக்​கும் வாக​னங்​கள் மீது நடவடிக்கை எடுத்து வரு​கின்​றோம். பழைய மற்​றும் புதிய ஆட்​டோக்​கள் அனைத்​துக்​கும் விரை​வில் தமிழகம் முழு​வதும் பிரத்​யேக நம்​பர் பிளேட் வழங்க டெண்​டர் விட திட்​ட​மிட்​டுள்​ளோம். மேலும் போக்​கு​வரத்து ஆணை​யரகம் தரப்​பில் 22 வாகன சோதனைச் சாவடிகளில் ஹை-டெக் கேம​ராக்​கள் பொருத்​தும் பணி​களும் நடை​பெறுகின்​றன” என்​றார். - மணிகண்டன் ஆறுமுகம்

தமிழகத்தில் ஆட்டோக்களுக்கு பிரத்யேக நம்பர் பிளேட் வழங்க புதிய திட்டம்
நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in