

சென்னை: தமிழகத்தில் மின்தேவை புதிய உச்சம் அடைந்து ஒரே நாளில் 21,724 மெகாவாட் பதிவாகி இருப்பதாக, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு கடுமையான வெயில் பொதுமக்களை வாட்டி வதைக்கிறது. கடந்த 14ம் தேதி மாநிலத்தின் மின் தேவை புதிய உச்சத்தை அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: வாரத்தின் தொடக்க நாளான திங்கட்கிழமை 21,629 மெகாவாட் பதிவான நிலையில் 14-ம் தேதி மின்தேவை 21,724 மெகாவாட் என்ற புதிய வரலாற்று உச்சத்தை எட்டியது. இருப்பினும், அன்றைய மொத்த மின்நுகர்வு 453.447 மில்லியன் யூனிட்கள் ஆக இருந்தது. இது, 2026 ஏப்ரல் 24 அன்று பதிவான 471.456 மில்லியன் யூனிட்கள் என்ற அதிகபட்ச தினசரி மின்நுகர்வு சாதனையை விட குறைவு தான். இருப்பினும், இது ஜூலை மாதத்தில் புதிய உச்சம் ஏற்படுவது அரிது தான். இவ்வாறு அவர்கள் கூறினர்.