“தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழகம் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்” - பெ.சண்முகம் வலியுறுத்தல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்

Updated on
1 min read

சேலம்: தொகுதி மறுசீரமைப்பு விவ​காரத்​தில் தமிழகம் ஒற்​றுமை​யுடன் செயல்பட வேண்​டும் என மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

சேலத்​தில் செய்​தி​யாளர்​களிடம் மேலும் அவர் கூறியதாவது: தொகுதி மறுசீரமைப்பு தொடர்​பாக தமிழக அரசு கூட்​டிய நாடாளு​மன்ற உறுப்​பினர்​கள் கூட்​டம் சென்​னையில் நடை​பெற்​றது. இந்​தக் கூட்​டத்​தில் அதி​முக, திமுக உள்​ளிட்ட பிர​தானக் கட்​சிகள் பங்​கேற்​காதது வருத்​தமளிக்​கிறது.

தமிழகத்​தின் நாடாளு​மன்ற பிர​தி​நி​தித்​துவ விகிதம் குறை​யும் என்ற அச்​சம் நிலவி வரும் நிலை​யில், இதுதொடர்​பாக தமிழக அரசு கூட்​டத்தை ஏற்​பாடு செய்​தது. தொகுதி மறுசீரமைப்பு தொடர்​பாக சிறப்பு நாடாளு​மன்ற கூட்​டத்​தொடரை நடத்த மத்​திய அரசு தயா​ராகி வரு​வ​தாக செய்​தி​கள் வெளி​யாகி​யுள்​ளன.

வரும் 17, 18, 19 ஆகிய தேதி​களில் இதுதொடர்​பான மசோதா குறித்து விவா​திக்க சிறப்பு கூட்​டத் தொடரை அவர்​கள் நடத்​து​வதென்று தீர்​மானித்​திருக்​கிறார்​கள். இத்​தகைய சூழலில் நடை​பெற்ற கருத்​துகேட்​புக் கூட்​டத்​தில் திமுக பங்​கேற்​காதது சரியல்ல.

மேகே​தாட்டு உள்​ளிட்ட முக்​கிய பிரச்சி​னை​கள் தொடர்​பாக அனைத்​துக் கட்​சிக் கூட்​டத்தை நடத்த வேண்​டும் என்று திமுக தொடர்ந்து வலி​யுறுத்தி வரு​கிறது. ஆனால், அதற்​கான கூட்​டத்தை நடத்​தாமல் தொகுதிமறுசீரமைப்பு தொடர்பாக மட்​டும் தமிழக அரசு கூட்​டம் நடத்​தி​யிருப்​பது ஏற்​புடையதல்ல என்று திமுக தெரி​வித்​துள்​ளது.

தொகுதி மறுசீரமைப்பு பிரச்​சினை​யில் தமிழகத்​துக்​கான ஒரு​மித்த கருத்து அவசி​யம்.எனவே, திமுக இந்​தக் கூட்​டத்​தில் பங்​கேற்​றிருக்க வேண்​டும். தமிழகத்​தின் ஒற்​றுமை​யைப் பலப்​படுத்​தும் முயற்சி சரியானது. அனைவரும் ஒன்​றிணைந்​து, தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் மத்திய பாஜக அரசு நடத்​தும் நாடகத்தை முறியடிக்க வேண்​டும்.

பட்​ஜெட்​டில் மகளிர் உரிமைத்​தொகை ரூ.2,500 ஆக உயர்த்​து​வது குறித்து எந்த அறி​விப்​பும் வெளி​யிடப்​பட​வில்​லை. வேலைவாய்ப்​பற்ற இளைஞர்​களுக்கு ரூ.4,000 உதவித்​தொகை வழங்​கப்​படும் என்ற அறிவிப்​பும் இடம்​பெற​வில்​லை. தற்​போதுஅரசுத் துறை​களில் ஒப்​பந்​தம் மற்​றும் மதிப்​பூ​தி​யம் உள்​ளிட்ட தற்​காலிகப் பணி​யாளர் முறை​யிலேயே நியமனங்​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன.

எனவே, காலிப் பணி​யிடங்​களை நிரப்ப தமிழக அரசு உடனடி​யாக நடவடிக்கை எடுக்க வேண்​டும். சேலம், நாமக்​கல், ஈரோடு உள்​ளிட்ட சில மாவட்​டங்​களில் தனி​யார் பேருந்து முதலாளி​கள் தன்​னிச்​சை​யாக பேருந்து கட்​ட​ணத்தை உயர்த்​தி​யுள்​ளனர். தமிழக அரசு இப்பிரச்சினையில் தலை​யிட்டு தன்னிச்சையாக உயர்த்​தப்​பட்ட கட்​ட​ணத்தை உடனடி​யாக ரத்து செய்ய வேண்​டும். இவ்​வாறு அவர் தெரிவித்​தார்​.

<div class="paragraphs"><p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்</p></div>
முதல்வர் விஜய் தலைமையில் நடந்த எம்.பி.க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in