பணி​யில் உள்ள ஆசிரியர்களுக்கான ‘டெட்’ தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை

பணி​யில் உள்ள ஆசிரியர்களுக்கான ‘டெட்’ தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை
Updated on
1 min read

சென்னை: பணி​யில் உள்ள ஆசிரியர்​களுக்கு நடத்​தப்​பட்ட சிறப்பு தகு​தித் தேர்வு (டெட்) முடிவு​களை வெளி​யிட கூடாது என்று இடைக்​காலத் தடை விதித்து சென்னை உயர் நீதி​மன்​றம் உத்தரவிட்​டுள்​ளது.

கட்​டாயக் கல்வி உரிமை சட்​டத்​தின்​படி, பணி​யில் உள்ள ஆசிரியர்​களும் தகு​தித் தேர்​வில் தேர்ச்சி பெற வேண்​டும் என்று உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது. ஐந்து ஆண்​டு​களில் பணி ஓய்வு பெறவுள்ள ஆசிரியர்​களுக்​குத் தகு​தித் தேர்​வில் தேர்ச்சி பெறு​வதற்​கான காலக்​கெடுவை மேலும் 3 ஆண்​டு​களுக்கு நீட்​டித்து உச்ச நீதி​மன்​றம் கடந்த மே மாதம் உத்​தர​விட்​டது.

இந்​நிலை​யில், பிற்​படுத்​தப்​பட்ட, மிக​வும் பிற்​படுத்​தப்​பட்ட, சீர் மரபினர் மற்​றும் மாற்​றுத் திற​னாளி​களுக்​கான குறைந்​த​பட்ச தேர்ச்சி மதிப்​பெண்​களை 55-ல் இருந்து 50 சதவீத​மாக​வும், பட்​டியலின மற்​றும் பழங்​குடி​யினருக்​கான குறைந்​த​பட்ச மதிப்​பெண்​களை 45-ல் இருந்து 40 சதவீத​மாக​வும் குறைத்து தமிழக அரசு கடந்த ஜனவரி மாதம் அரசாணை பிறப்​பித்​தது.

இதே​போல் பொதுப் பிரி​வினருக்​கான குறைந்​த​பட்ச மதிப்​பெண்​களை 60-ல் இருந்து 50 சதவீத​மாக குறைக்க கோரி பொதுப்​பிரிவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் உள்​ளிட்ட 3 ஆசிரியர்​கள், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் ஏற்​கெனவே வழக்கு தொடர்ந்​திருந்​தனர்.

அதில், பிஹாரில் பொதுப்​பிரி​வினருக்கு குறைந்​த​பட்ச தேர்ச்சி மதிப்​பெண்​கள் 50 சதவீத​மாக நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. இதே​போல தமிழகத்​தி​லும் பொதுப்​பிரி​வினருக்​கான மதிப்​பெண்​களைக் குறைக்க உத்​தர​விட வேண்​டும்.

பொதுப்பிரிவினர்

ஏற்​கெனவே முது​நிலை பட்​ட​தாரி ஆசிரியர் பணிக்கு விண்​ணப்பிக்க பொதுப்​பிரிவு ஆசிரியர்​களுக்கு 50 சதவீத மதிபெண்​கள் மட்​டுமே நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பாக பரிசீலிக்க அரசுக்கு உத்​தர​விட வேண்​டும் என்று அவர்​கள் கோரி​யிருந்​தனர்.

பணி​யில் உள்ள ஆசிரியர்​களுக்​கான சிறப்பு தகு​தித் தேர்வு நடந்து முடிந்​துள்ள நிலை​யி்ல், இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்​னிலை​யில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, பொதுப்​பிரிவு ஆசிரியர்​களுக்​கான தகு​தித் தேர்​வில் குறைந்​த​பட்ச தேர்ச்சி மதிப்​பெண்​களைக் குறைப்​பது தொடர்​பாகத் தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்​க​வுள்​ள​தாக அரசு தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

இந்த கொள்கை முடிவை நீதி​மன்​றத்​தில் தெரிவிக்க ஏது​வாக வழக்கு விசா​ரணையை ஜூலை 24-ம் தேதிக்கு தள்ளி வைத்​துள்ள நீதிப​தி, அது​வரை சிறப்பு தகு​தித் தேர்​வுக்​கான முடிவு​களை வெளி​யிட கூடாது என்று இடைக்​காலத் தடை வி​தித்​து உத்​தர​விட்​டுள்​ளார்​.

பணி​யில் உள்ள ஆசிரியர்களுக்கான ‘டெட்’ தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை
ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்: இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சியால் முதலீட்டாளர்களுக்கு ரூ.8 லட்சம் கோடி நஷ்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in