

சென்னை: பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் பெய்து வரும் தொடர் மழையால் விளைபயிர்கள் வீணாகி, விவசாயிகள் விழிகளில் கண்ணீர் குளம் போல் பெருகும் அவலம் ஏற்பட்டுள்ளது.
நாகையில் 1,000 ஏக்கர் தாளடிப் பயிர்கள், திருவாரூரில் 7,000 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள், திருத்துறைப்பூண்டியில் 2,000 ஏக்கர் நெற்பயிர்கள், தூத்துக்குடியில் 50,000-க்கும் மேற்பட்ட வாழைகள், கடலூரில் 300 ஏக்கர் சம்பா பயிர்கள், சிதம்பரத்தில் 750 ஏக்கர் நெற்பயிர்கள், மயிலாடுதுறையில் 300 ஏக்கர் சம்பா பயிர்கள் என பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிர்கள் சேதமடைந்துள்ளன.
அவர்களுக்கு தக்க இழப்பீடு வழங்கி துயரைத் துடைக்க வேண்டிய திமுக அரசோ துணை முதல்வர் உதயநிதிக்கு பிறந்தநாள் விழாவில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. உழவர்களைக் கண்டுகொள்ளாது, ‘உதய’ விழா கொண்டாடும் திமுக அரசை விரைவில் மக்கள் தூக்கியெறிவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.