மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக நிர்வாகி பூச்சி முருகனிடம் நலம் விசாரித்தார் ஸ்டாலின்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக நிர்வாகி பூச்சி முருகனிடம் நலம் விசாரித்தார் ஸ்டாலின்
Updated on
1 min read

சென்னை: அப்​போலோ மருத்​து​வ​மனை​யில் சிகிச்​சைக்​காக அனு​ம​திக்​கப்​பட்​டிருக்​கும் திமுக தலைமை நிலை​யச் செய​லா​ளர் பூச்சி முரு​கனை கட்​சி​யின் தலை​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று சந்​தி்த்து நலம் விசா​ரித்​தார்.

திமுக தலைமை நிலை​யச் செய​லா​ள​ரும், தென்​னிந்​திய நடிகர் சங்​கத்​தின் துணைத் தலை​வரு​மான பூச்சி எஸ்​.​முரு​கன், கடந்த மாதம் உடல்​நலக்​குறைவு காரண​மாக மதுரை மாவட்ட மருத்​து​வ​மனை​யில் முதலுதவி சிகிச்சை பெற்​றார்.

அதைத் தொடர்ந்து மேல்​சிகிச்​சைக்​காக சென்னை அப்​போலோ மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். கடந்த ஒரு மாத​கால​மாக சிகிச்​சை​யில் உள்ள அவர் தற்​போது உடல்​நலம் தேறி வரு​கிறார்.

இந்​நிலை​யில், அப்​போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பூச்சி முரு​கனை திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று சந்​தித்து நலம் விசா​ரித்​தார்.

அவரது உடல்​நிலை குறித்து மருத்​து​வர்​களிடம் விரி​வாக கேட்​டறிந்த ஸ்டா​லின், விரை​வில் முழு​மை​யாக குணமடைந்து பொதுப்​பணிக்கு திரும்ப வேண்​டும் என தனது விருப்​பத்​தை​யும் தெரி​வித்​தார். முன்​னாள் அமைச்​சர் எ.வ.வேலு உள்​ளிட்ட கட்சி நிர்​வாகி​கள் உடனிருந்​தனர்.

இவர்​களை தொடர்ந்து தென்​னிந்​திய நடிகர் சங்​கத் தலை​வர் நாசர், பொதுச் செய​லா​ளர் விஷால், பொருளாளர் கார்த்​தி, துணைத் தலை​வர் கருணாஸ் உள்​ளிட்ட நிர்​வாகி​களும் பூச்சி முரு​கனை சந்​தித்து நலம்​ விசாரித்​தனர்​.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக நிர்வாகி பூச்சி முருகனிடம் நலம் விசாரித்தார் ஸ்டாலின்
டிஜிட்டல் பரிவர்த்தனை கட்டணத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in