இலங்கைத் தமிழர் உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும்: தமிழக அரசியல் கட்சிகளுக்கு இலங்கை எம்.பி. வலியுறுத்தல்

இலங்கைத் தமிழர் உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும்: தமிழக அரசியல் கட்சிகளுக்கு இலங்கை எம்.பி. வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: இலங்கை தமிழர்​களின் உரிமை​களுக்​காக தமிழகத்​தின் அனைத்​துக் கட்​சிகளும் ஓரணி​யில் திரண்டு குரல்​கொடுக்க வேண்​டும் என தமிழக முதல்​வர் மற்​றும் பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​களை சந்​தித்து இலங்கை எம்​.பி. கஜேந்​திரகு​மார் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இலங்கை தமிழர்​கள் எதிர் கொள்​ளும் பல்​வேறு பிரச்​சினை​கள் தொடர்​பாக தமிழ்த்​தேசி​யப்பேர​வை​யின் தலை​வரும், இலங்கை எம்​.பி.​யு​மான கஜேந்​திரகு​மார் பொன்​னம்​பலம் மற்​றும் நிர்​வாகி​கள் தலை​மைச் செயல​கத்​தில் முதல்​வர் விஜய்யை நேற்று முன்​தினம் சந்​தித்​தனர். அதைத்​தொடர்ந்து எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின், இந்​திய கம்​யூனிஸ்ட்,மார்க்​சிஸ்ட் கட்​சித் தலைவர்​கள்,நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் ஆகியோரை நேற்று சந்​தித்​தனர்.

இதுதொடர்​பாக செய்​தி​யாளர்​களிடம் எம்பி கஜேந்​திரகு​மார் கூறிய​தாவது: இலங்​கை​யில் தற்​போது அமைந்​துள்ள தேசிய மக்​கள் சக்தி அரசு புதிய அரசி​யலமைப்பை உரு​வாக்​கி, அதன்​மூலம் தமிழ் மக்​களின் இனப்​பிரச்​சினைக்கு தீர்வு காணப்​படும் எனக்​கூறி வரு​கிறது. ஒற்​றை​யாட்சி முறைமையை வைத்​துக்​கொண்டு இந்த பிரச்​சினைக்கு தீர்வு காண முடி​யாது. ஒற்​றை​யாட்சி முறைமையை பயன்​படுத்தி தமிழ் மக்​களின் தாயக பகு​தி​கள் திட்​ட​மிட்டு சிங்​களமய​மாக்​கப்​பட்டு வரு​கின்​றன. சைவ கோயில்​கள் இடிக்​கப்​பட்​டு, பவுத்த கோயில்​கள் கட்​டப்​படு​கின்​றன. இது இன அழிப்​பாகும்.

இத்​தருணத்​தில் இலங்கை தமிழர்​களின் உரிமை​களுக்​காக தமிழகத்​தின் அனைத்து கட்​சிகளும் ஓரணி​யில் திரண்டு குரல்​கொடுக்க வேண்​டும். தமிழகத்​தின் குரல் தான் மத்​திய அரசுக்கு அழுத்​தம் கொடுத்​து,அதன்​மூலம் இலங்கை அரசுக்கு உரிய நெருக்​கடியை ஏற்​படுத்​தும். இதையொட்டி இலங்கைத் தமிழர் விவ​காரங்​களை முறை​யாக கையாள தமிழகத்​தில் உள்ள நாடாளு​மன்ற, சட்​டப்​பேரவை பிர​தி​நி​தித்​து​வம் கொண்​ட​வர்​கள் மற்​றும் ஆதரவு இயக்​கங்​களை உள்​ளடக்​கிய ஒருங்​கிணைப்பு குழு ஒன்றை உரு​வாக்க வேண்​டும்.

தமிழக மீனவர்​களுக்​கும், இலங்கைத் தமிழ் மீனவர்​களுக்​கும் இடையே புரிந்​துணர்​வுடன் கூடிய தீர்வை ஏற்​படுத்த வேண்​டும் என முதல்​வரிடமும், மற்ற கட்சித் தலை​வர்​களிட​மும் வலி​யுறுத்​தினோம். மீனவர்​கள் பிரச்​சினையைத் தீர்க்க தமிழக மீனவர்​கள், இலங்கை மீனவர்​கள் இணைந்த ஒரு மாநாட்டை நடத்த நடவடிக்கை மேற்​கொள்ள தயா​ராக இருப்​ப​தாக முதல்​வர் தெரி​வித்​துள்​ளார். இத்​துடன் தமிழக முகாம்​களில் வாழும் இலங்கை அகதி​களின் பிரச்​சினை​களுக்​கும் தீர்வு காண வேண்​டும் என வலி​யுறுத்தி உள்​ளோம். இவ்​வாறு அவர் கூறி​னார்.

இலங்கைத் தமிழர் உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும்: தமிழக அரசியல் கட்சிகளுக்கு இலங்கை எம்.பி. வலியுறுத்தல்
டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு நோட்டீஸ்: சினிமா, ஓடிடி பைரசிக்கு முற்றுப்புள்ளி வைக்க உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in