தவெக அரசுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங். பாராட்டு

தவெக அரசுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங். பாராட்டு
Updated on
1 min read

திருச்சி: தமிழகத்தை முன்​னேற்​றப் பாதைக்கு தவெக அரசு கொண்டு செல்​லும் என ஸ்ரீலங்கா முஸ்​லிம் காங்​கிரஸ் தலை​வர் ரவூப் ஹக்​கீம் எம்​.பி. பாராட்டு தெரி​வித்​தார்.

திருச்சி விமான நிலை​யத்​தில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் அவர் தெரி​வித்​த​தாவது: தமிழகத்​தில் பதவி​யேற்​றுள்ள புதிய அரசு, மாநிலத்தை அடுத்​தகட்ட முன்​னேற்​றப் பாதைக்கு எடுத்​துச் செல்​வார்​கள் என்று நாங்​கள் நம்​பு​கிறோம்.

தமிழக - இலங்கை மீனவர்​கள் பிரச்​சினை என்​பது இரு தரப்​பிலும் மனி​தாபி​மான ரீதி​யாக அணுகப்பட வேண்​டிய ஒரு விஷ​யம். சட்ட மீறல்​கள் என்ற விவ​காரத்​தை​யும் தாண்​டி, மக்​களின் வாழ்​வா​தா​ரத்தை இதில் கவனத்​தில் கொள்ள வேண்​டும். இருதரப்​பிலும் விட்​டுக்​கொடுத்து சுமுக முடிவு காணப்பட வேண்​டும். இதுதொடர்​பாக தமிழக அரசும், மத்​திய அரசும், இலங்கை அரசு மற்​றும் யாழ்​குடா நாட்டு மீனவர் சமூகத்​துடன் இணைந்து பேச்​சு​வார்த்​தையை முன்​னெடுக்க வேண்​டும்.

வேண்டுகோள்... ஏற்​கெனவே இலங்​கை​யில் பொருளா​தார நெருக்​கடி ஏற்​பட்​டுள்ள நிலை​யில், மேற்​காசிய நாடு​களில் நில​வும் போர் காரண​மாக ஏற்​பட்​டுள்ள பொருளா​தா​ரச் சுமை​கள், இலங்கை அரசுக்கு மிக சவாலான காரிய​மாக உரு​வெடுத்​துள்​ளது. எனவே, தமிழகம் உள்​ளிட்ட தென்​பி​ராந்​திய மாநிலங்​களில் உள்ள முதலீட்​டாளர்​கள் இலங்​கை​யில் முதலீடு செய்ய முன்வர வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்​.

தவெக அரசுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங். பாராட்டு
இளம்பெண்ணிடம் ஈவ்டீசிங்: தவெக ஒன்றிய செயலாளர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in