ஈரான் போர் கப்பலில் இருந்து 208 வீரர்களை மீட்ட இலங்கை கடற்படை

மனிதாபிமான நடவடிக்கை என அதிபர் அநுர குமார திச​நாயகே தகவல்
ஈரானின் 'ஐரிஸ் புஷேர்' போர்க் கப்பலிருந்து மீட்கப்படும் வீரர்கள்.

ஈரானின் 'ஐரிஸ் புஷேர்' போர்க் கப்பலிருந்து மீட்கப்படும் வீரர்கள்.

Updated on
1 min read

ராமேசுவரம்: அமெரிக்கா மீண்​டும் தாக்​குதல் நடத்​தலாம் என்ற பதற்​ற​மான சூழலில், ஈரானுக்கு சொந்​த​மான 2-வது போர் கப்​பலான ‘ஐரிஸ் புஷேர்’-ல் இருந்து 208 ஈரான் நாட்டு வீரர்​களை இலங்கை கடற்​படை மீட்டுள்​ளது. இதுகுறித்து இலங்கை அதிபர் அநுர குமார திச​நாயகே கூறும்​போது, இது மனி​தாபி​மான நடவடிக்கை என தெரி​வித்​துள்​ளார்.

ஐஆர்​ஐஎஸ் டேனா இந்​தி​யா​வில் கூட்​டுப் பயிற்​சியை முடித்​து​விட்​டு, ஈரான் திரும்பிய ஐஆர்​ஐஎஸ் டேனா என்ற போர்க் கப்​பலை, இந்​தி​யப் பெருங்​கடல் பகு​தி​யில் அமெரிக்க கடற்​படை​யின் நீர்​மூழ்கி கப்​பல் மார்க்​-48 என்ற சக்தி வாய்ந்த டார்​பிடோ குண்டு மூலம் கடந்த சனிக்​கிழமை தகர்த்​தது.

இதில் 87 வீரர்​கள் உயி​ரிழந்​தனர். இந்த தாக்​குதலை தொடர்ந்து ஈரான் போர்க் கப்​பல் ஐஆர்​ஐஎஸ் டேனா​வில் இருந்​து, அவசர உதவி கோரி கொழும்பு கடல்​சார் மீட்பு ஒருங்​கிணைப்பு மையத்​துக்கு தகவல் அனுப்​பப்​பட்​டது.

இலங்​கை​யின் காலே பகு​தி​யில் இருந்து 20 கடல் மைல் தொலை​வில் ஈரான் போர்க்​கப்​பல் கடலில் மூழ்​கியது. இது இலங்கை கடல் எல்​லைக்கு உட்​பட்ட பகுதி ஆகும்.

இதுகுறித்து இலங்​கைக்கு தகவல் கிடைத்​ததும் அந்​நாட்டு கடற்​படை​யும், விமானப்​ படை​யும் உடனடி​யாக மீட்​புப் பணி​யில் களமிறங்​கின. இதில் 32 பேரை உயிருடன் மீட்​டதுடன், 84 பேரின் உடல்​களும் மீட்​கப்​பட்​டன.

இந்​நிலை​யில் ஈரானின் 2-வது போர்க் கப்​பலான ‘ஐரிஸ் புஷேர்’, 200-க்​கும் மேற்​பட்ட வீரர்​களு​டன், இலங்கை கடற்​பகுதி அருகே சென்று கொண்​டிருந்​தது. இந்​தக் கப்​பல் மீதும் அமெரிக்கா தாக்​குதல் நடத்​தலாம் என்ற பதற்​றமான சூழலில், போர்க் கப்​பலை பாது​காப்​பாக இலங்கை கடல் எல்​லைக்​குள் அனு​ம​திக்​கு​மாறு அந்​நாட்டு அரசிடம் ஈரான் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதைத்​தொடர்ந்து இலங்கை அதிபர் அநுர குமார திச​நாயகே உயர்​மட்ட அதி​காரி​களு​டன் ஆலோ​சனை நடத்​தி, அதில் எடுக்​கப்​பட்ட முடி​வின்​படி, ‘ஐரிஸ் புஷேர்’ போர்க் கப்​பல் கிழக்கு திரி​கோணமலை துறை​முகத்​துக்கு திருப்​பி​விடப்​பட்​டு, அதில் இருந்த 208 வீரர்​களை இலங்கை கடற்​படை​யினர் மீட்​டு, தலைநகர் கொழும்பு நகருக்கு அழைத்து வந்​தனர்.

இந்​தக் கப்​பலில், 53 அதி​காரி​கள், 84 கேடட்​கள், 48 மூத்த கடற்​படை வீரர்​கள் மற்​றும் 23 கடற்​படை வீரர்​கள் என 208 பேர் இருந்​த​தாக இலங்கை அரசு தெரி​வித்​துள்​ளது. மேலும், கப்​பலில் மீட்​கப்​பட்ட 208 ஈரானிய கடற்​படை​யினர் வெலிசற கடற்​படை முகாமில் பாது​காப்​பாக தங்க வைக்க நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது.

இந்த நடவடிக்கை குறித்து இலங்கை அதிபர் அநுர குமார திச​நாயகே கூறும்​போது, 2 ஈரான் நாட்டுக் போர்க் கப்​பல்​கள் தொடர்​பான பிரச்​சினை​யில் நாம் நடுநிலை​யையே பின்​பற்​றி​யுள்​ளோம். மனி​தாபி​மானத்​துக்கு முதன்மை அளித்துள்ளோம் என்று தெரிவித்​தார்.

<div class="paragraphs"><p>ஈரானின் 'ஐரிஸ் புஷேர்' போர்க் கப்பலிருந்து மீட்கப்படும் வீரர்கள்.</p></div>
யுபிஎஸ்சி தேர்வில் தேசிய அளவில் 2-வது இடம்: வாடிப்பட்டி எலெக்ட்ரிக் கடைக்காரரின் மகள் சாதனை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in