பொங்கலுக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள்: பயணிகள் ஆலோசனைக் குழு வலியுறுத்தல்

பொங்கலுக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள்: பயணிகள் ஆலோசனைக் குழு வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: பொங்​கலுக்கு கூடு​தல் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்​டும் என பயணி​கள் ஆலோ​சனைக் குழு வலி​யுறுத்தி உள்​ளது.

அடுத்த ஆண்டு ஜன.14-ம் தேதி போகிப்​பண்​டிகை, 15-ம் தேதி பொங்​கல், 16-ம் தேதி மாட்​டுப்​பொங்​கல், 17-ம் தேதி காணும் பொங்​கல் வரு​கிறது.

இதையொட்டி சென்னை உட்பட பெருநகரங்​களில் இருந்து லட்​சக்​கணக்​கானோர் சொந்த ஊருக்​குச் செல்​வார்​கள்.

ரயில்​வே​யில் 60 நாட்​களுக்கு முன்பே டிக்​கெட் முன்​ப​திவு செய்து கொள்​ளும் வசதி இருக்​கிறது. அந்த வகை​யில், பொங்​கல் ரயில் டிக்​கெட் முன்​ப​திவு, கடந்த மாதம் 2-வது வாரத்​திலேயே முடிந்து விட்​டது.

இதற்​கிடையே, பொங்​கல் சிறப்பு ரயில்கள் அறி​விப்பு எப்​போது வெளி​யாகும் என பயணி​கள் மத்​தி​யில் எதிர்​பார்ப்பை ஏற்​படுத்தி உள்​ளது. மேலும், பொங்​கல் பண்​டிகையை ஒட்​டி, கூடு​தல் சிறப்பு ரயில்​களை இயக்க வேண்​டும் என பயணி​கள் கோரிக்கை விடுத்​துள்​ளனர்.

இதுகுறித்​து, தெற்கு ரயில்வே பயனாளர் ஆலோ​சனைக் குழு உறுப்​பினர் ஜாபர் அலி கூறிய​தாவது: தமிழக மக்​களின் முக்​கிய​மான பண்​டிகை​களில் ஒன்று பொங்​கல் பண்​டிகை.

வழக்​க​மாக இயக்​கப்​படும் விரைவு ரயில்​களில் டிக்​கெட் விற்று தீர்ந்​து​விட்ட நிலை​யில், சிறப்பு ரயில்​களுக்​காக பயணி​கள் காத்​திருக்​கின்​றனர். சென்னை உள்​ளிட்ட நகரங்​களில் வசிப்​போர் சொந்த ஊருக்​குச் செல்ல போதிய அளவில் சிறப்பு ரயில்​களை இயக்க வேண்​டும்.

குறிப்​பாக, தென்​மாவட்​டங்​களுக்கு கூடு​தல் சிறப்பு ரயில்​களை இயக்க வேண்​டும் அதே​போல், முன்​ப​திவு இல்​லாத ரயில்களை​யும் கூடு​தலாக இயக்க வேண்​டும் என தெற்கு ரயில்வே அதி​காரி​களிடம் வலி​யுறுத்தி உள்​ளோம். இவ்​வாறு அவர் கூறி​னார்​.

பொங்கலுக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள்: பயணிகள் ஆலோசனைக் குழு வலியுறுத்தல்
தவெகவுக்கு மோதிரம் சின்னம்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in