

கோப்புப் படம்
சென்னை: வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் தாம்பரம் - தென்காசி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: கூட்ட நெரிசலை குறைக்க தாம்பரம் - தென்காசி இடையே வாரம் இருமுறை வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படும். தாம்பரத்தில் இருந்து தென்காசிக்கு (ரயில் எண். 06135) ஜூலை 30, ஆக. 1, 6, 8, 13, 15 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும்.
தாம்பரத்தில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்படும் ரயில், மாலை 3.30 மணிக்கு தென்காசி சென்றடையும், இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.
மறுமார்க்கமாக தென்காசியில் இருந்து தாம்பரத்துக்கு (ரயில் எண். 06136) ஜூலை 31, ஆக. 2, 7, 9, 14, 16 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில், தென்காசியில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு மாலை 3.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். சிறப்பு ரயிலில் இரண்டு 3-ம் வகுப்பு ஏசி பெட்டிகள், ஒரு ஏசி இருக்கை வசதிகொண்ட பெட்டி, 14 இருக்கைவசதி கொண்ட பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு சாதாரன பெட்டிகள் இடம் பெற்றிருக்கும். இந்த ரயில்களுக்கு முன்பதிவு நடைபெற்று வருகிறது.