பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 34 ஆயிரம் சிறப்பு பேருந்துகள்

சென்​னை​யில் இருந்து 23 ஆயிரம் பேருந்​துகளுக்கு ஏற்பாடு
கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: பொங்​கல் பண்​டிகையை முன்​னிட்டு தமிழகம் முழு​வதும் 34,087 சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​படும் என்று அமைச்சர் சிவசங்​கர் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து சென்னையில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறியதாவது: பொங்​கல் திரு​நாளை முன்​னிட்​டு, ஜன.9 முதல் 14-ம் தேதி வரை, சென்​னையி​லிருந்து தினசரி இயக்​கக் கூடிய 2,092 பேருந்​துகளு​டன் 10,245 சிறப்​புப் பேருந்​துகள் என 6 நாட்​களுக்​கும் சேர்த்து 22,797 பேருந்​துகளும் பிற ஊர்​களி​லிருந்து மேற்​கண்ட நாட்​களுக்கு 11,290 பேருந்​துகள் என மொத்​தம் 34,087 பேருந்​துகள் இயக்​கப்படும்.

அதேபோல், பொங்​கல் முடிந்த பிறகு, பிற ஊர்​களி​லிருந்து சென்​னை வரும் பயணி​களுக்​காக ஜன.16 முதல் 19-ம் தேதி வரை, தினசரி இயக்​கக் கூடிய 2,092 பேருந்​துகளு​டன் 6,820 சிறப்​புப் பேருந்​துகள் சேர்த்து 15,188 பேருந்​துகளும், ஏனைய பிற முக்​கிய ஊர்​களி​லிருந்து பல்​வேறு ஊர்​களுக்கு 9,820 என மொத்​தம் 25,008 பேருந்​துகளும் இயக்​கப்​படும்.

சென்​னை​யில் கிளாம்​பாக்​கம், கோயம்​பேடு, மாதவரம் பேருந்து நிலை​யங்​களி​லிருந்து பேருந்​துகள் இயக்​கப்​படும். பேருந்து நிலையங்களுக்கு செல்ல இணைப்​புப் பேருந்​துகள் 24 மணி நேர​ம் இயக்​கப்படும்.

மொத்​தம் 11 முன்​ப​திவு மையங்​கள் ஜன.9 முதல் 14 வரை செயல்​படும். மேலும் டிஎன்​எஸ்டிசி செயலி மற்​றும் www.tnstc.in போன்ற இணை​யதளங்​கள், வாட்​ஸ்​அப் எண் 9444018898 மூல​மும் முன்​ப​திவு செய்​யலாம். பேருந்​துகளின் இயக்​கம் குறித்து புகார் தெரிவிக்க, 94450 14436 என்ற எண்ணை தொடர்பு கொள்​ளலாம். ஆம்னி பேருந்​துகளில் அதிக கட்​ட​ண புகார்​களுக்கு 1800 425 6151, 044-2474 9002, 044-26280445, 044-26281611 என்ற தொலைபேசி எண்​களை தொடர்பு கொள்​ளலாம்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
சபரிமலையில் திரண்ட கட்டுக்கடங்காத கூட்டம்: குடிநீர், கழிப்பிடமின்றி பக்தர்கள் அவதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in