எம்எல்ஏக்கள் பேசுவதற்கு 10 நிமிடங்கள் மட்டுமே அனுமதி: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் அறிவிப்பு

எம்எல்ஏக்கள் பேசுவதற்கு 10 நிமிடங்கள் மட்டுமே அனுமதி: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் அறிவிப்பு
Updated on
2 min read

சென்னை: சட்​டப்​பேர​வை​யில் பேர​வைத் தலை​வர் ஜேசிடி பிர​பாகர் நேற்று வெளி​யிட்ட அறி​விப்​பு: புதிய உறுப்​பினர்​கள் தங்​கள் தொகுதி பிரச்​னை​களை சட்​டப்​பேர​வை​யில் எடுத்​துரைக்க வேண்​டும் என்​ப​தற்​காக முதல் கூட்​டத்​தொடரில் கூடு​தல் நேரம் வழங்​கப்​பட்​டது.

ஆனால், தற்​போது நடை​பெற்று வரும் விவாதங்​களில் குறுக்​கீடு​கள் அதி​கரித்து வரு​கிறது. உறுப்​பினர்​கள் குற்​றச்​சாட்​டு​கள் மற்​றும் அவதூறுகளைத் தவிர்த்​து, அவை​யின் நேரத்தை முறை​யாகப் பயன்​படுத்த வேண்​டும்.

எனவே நேரததை முறைப்​படுத்​தும் நோக்​கில் ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் உறுப்​பினர்​கள் பேசுவதற்கு 7 முதல் 10 நிமிடங்​கள் மட்​டுமே அனு​மதி வழங்​கப்​படும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

‘சூரியனை தொட முடி​யாது’

சட்​டப்​பேர​வை​யில் வேளாண் பட்​ஜெட் மீதான பதி​லுரை​யில் அமைச்​சர் வினோத் பேசும்​போது, “கடைசி​யாக சூரிய​னால் அனை​வருக்​கும் வியர்த்​தது. நீங்​கள் (முதல்​வர் விஜய்) வந்த பின்​னர் சூரியனுக்கே வியர்த்​தது என்று திமுகவை மறை​முக​மாக விமர்​சித்​தார்.

இதற்கு திமுக எம்​எல்ஏ ஓ.பன்​னீர்​செல்​வம் பதிலளித்து பேசுகை​யில், “இது​வரை யாருமே நெருங்​க​முடி​யாத நிலை​யில்​தான் சூரியன் இருக்​கிறது. எத்​தனையோ விஞ்​ஞானிகள் ஆராய்ச்சி செய்​தும் சூரியனை நோக்கி ராக்கெட் செலுத்த முடிய​வில்​லை”என்​றார்.

பேராசிரியர் காலிப் பணி​யிடம்

அதி​முக எம்​எல்ஏ ஒ.எஸ்​. மணி​யன் பேசும்​போது, “நம்​நாட்​டில் வடகிழக்கு மாநிலங்​களில் 100 சதவீதம் இயற்கை விவ​சா​யத்தை உரு​வாக்​கி​யுள்​ளனர். ஆனால், நமது மாநிலத்​தில் இயற்கை விவ​சா​யம் என்​பது பெயரள​வில் மட்​டுமே இருக்​கிறது.

வேளாண் பட்​ஜெட்​டில் ஏக்​கருக்கு ரூ.4,000 ஊக்​கத்​தொகை வழங்​கு​வோம் என்று அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. ஒரு விவ​சா​யிக்கு எத்​தனை ஏக்​கர் நிலத்​துக்கு நீங்​கள் ஊக்​கத்​தொகை வழங்​கு​வீர்​கள்?” என்று கேள்​வியெழுப்​பி​னார்.

அதைத் தொடர்ந்து அதி​முக எம்​எல்ஏ அக்ரி கிருஷ்ண​மூர்த்தி பேசும்​போது, “வேளாண் பல்​கலைக்​கழகத்​தில் 450-க்​கும் மேற்​பட்ட உதவி பேராசிரியர் பணி​யிடங்​கள் 10 ஆண்​டு​களாக காலி​யாக உள்​ளன.

அவற்றை உடனே நிரப்ப வேண்​டும். பல்​வேறு பேராசிரியர் பணிக்​கான பதவி உயர்​வை​யும் விரைந்து வழங்க வேண்​டும்” என்​றார்

வாகன வசதி வேண்​டும்

சட்​டப்​பேர​வை​யில் விசிக உறுப்​பினர் ஜோதி​மணி பேசும்​போது, “காலணி​கூட அணிய முடி​யாத நிலை​யில்​தான் பல்​வேறு எம்​எல்​ஏ.க்​களின் நிதி​நிலை உள்​ளது.

லஞ்ச லாவண்​யம் இல்​லாத அரசு அமைய வேண்​டுமெனில் நமது உறுப்​பினர்​களை நலமுடன் வைத்​துக்​கொள்​வது அவசி​ய​மாகும்.

எனவே, எம்எல்ஏக்கள் மக்​கள் பணி செய்​வதற்கு வாகன வசதி​கள் ஏற்​பாடு செய்து தர வேண்​டும்” என்று கோரிக்கை வைத்​தார்.

இதற்கு பேர​வைத்​தலை​வர் ஜேசிடி பிர​பாகர் பதிலளித்து பேசுகை​யில், “எம்​எல்​ஏ.க்​கள், முன்​னாள் எம்​எல்​ஏ.க்​கள் தரப்​பில் பல்​வேறு கோரிக்​கைகள் வந்​துள்​ளன. அவற்றை முதல்​வர் கவனத்​துக்கு கொண்டு செல்​கிறேன். அவர் உரிய நடவடிக்கை எடுப்​பார்” என்​றார்.

மாணவர் மரணம்

கோயம்​புத்​தூரில் கல்​லூரி மாணவன் அமுதன் கொலை செய்​யப்​பட்​டது குறித்து கவன ஈர்ப்பு தீர்​மானம் எடுத்​துக்​கொள்ள வேண்​டுமென எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின் கோரிக்கை வைத்​தார். அதற்கு பேர​வைத் தலை​வர் ஜேசிடி பிர​பாகர், “சட்​டப்​பேர​வை​யில் ஆகஸ்ட் 17-ம் தேதி இந்​த விவ​காரம்​ குறித்​து வி​வா​திக்​கலாம்​” என்று தெரிவித்தார்.

எம்எல்ஏக்கள் பேசுவதற்கு 10 நிமிடங்கள் மட்டுமே அனுமதி: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் அறிவிப்பு
220 கோயில்களில் அறங்காவலர் பணி: விண்ணப்பிக்க ஆக.28 வரை கால அவகாசம் நீட்டிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in