220 கோயில்களில் அறங்காவலர் பணி: விண்ணப்பிக்க ஆக.28 வரை கால அவகாசம் நீட்டிப்பு

220 கோயில்களில் அறங்காவலர் பணி: விண்ணப்பிக்க ஆக.28 வரை கால அவகாசம் நீட்டிப்பு
Updated on
1 min read

சென்னை: இந்து சமய அறநிலை​யத்​துறை​யின் கட்​டுப்​பாட்​டில் உள்ள 220 கோயில்​களுக்​குப் பரம்​பரை முறை​சாரா அறங்காவலர்களை நியமிப்​ப​தற்​கான கால அவகாசத்தை ஆக.28-ம் தேதி வரை நீட்​டித்து அறநிலை​யத்​துறை உத்​தர​விட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக இந்து சமய அறநிலை​யத்​துறை வெளி​யிட்​டுள்ள செய்​திக் குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: இந்து சமய அறநிலை​யத்​துறை கட்​டுப்​பாட்​டிலுள்ள 220 கோயில்​களுக்​குப் பரம்​பரை முறைவழி​சாரா அறங்​காவலர்​களை நியமனம் செய்​வதற்​கான அறி​விப்பு கடந்த ஜூன் 14-ம் தேதி வெளி​யிடப்​பட்​டது.

இதற்​கான விண்​ணப்​பங்​களைச் சமர்ப்​பிக்க முதலில் ஜூலை 22-ம் தேதி இறுதி நாளாக அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. பின்​னர், கோயில்​களின் நலனைக் கருத்​தில் கொண்டு முதற்​கட்​ட​மாக இந்த அவகாசம் ஆக.12-ம் தேதி மாலை 5.45 மணி வரை நீட்​டிக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், விண்​ணப்​பம் செய்​வதற்​கான கால அவகாசம் நேற்​றுடன் (ஆக.12) முடிவடைந்த நிலை​யில், பக்​தர்​களின் கோரிக்​கையை ஏற்று தகு​தி​யுள்ள நபர்​கள் கூடு​தல் எண்​ணிக்​கை​யில் விண்​ணப்​பிக்க ஏது​வாக, இந்த அவகாசம் தற்​போது ஆகஸ்ட் 28-ம் தேதி வரை மீண்​டும் நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது.

தகு​தி​யும் விருப்​ப​மும் உள்ள பக்​தர்​கள், இதற்​கான விண்​ணப்​பப் படிவத்​தைப் பூர்த்தி செய்து வரும் ஆக.28-ம் தேதி மாலை 5.45 மணிக்​குள் இணை​யதளத்​திலோ அல்​லது அந்​தந்த கோயில் அமைந்​துள்ள மண்டல இணை ஆணை​யர் அலு​வல​கத்​துக்கு நேரடி​யாகவோ அல்​லது அஞ்​சல் மூல​மாகவோ அனுப்பி வைக்​கலாம். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

220 கோயில்களில் அறங்காவலர் பணி: விண்ணப்பிக்க ஆக.28 வரை கால அவகாசம் நீட்டிப்பு
அதிமுக எம்எல்ஏ-க்களின் ராஜினாமா கடிதங்களை பேரவைத் தலைவர் விசாரணையின்றி ஏற்றுக்கொண்டது ஏற்புடையது அல்ல: உயர் நீதிமன்றத்தில் வாதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in