உழைப்பையும் விசுவாசத்தையும் காட்ட வேண்டும்: உறுப்பினர் இணைப்பு விழாவில் முதல்வர் விஜய் அறிவுறுத்தல்

ஜெகத்ரட்சகன் மகன், வைகைச் செல்வன் தவெகவில் சேர்ந்தனர்
முதல்வர் விஜய்

முதல்வர் விஜய்

Updated on
1 min read

சென்னை: ​தி​முக எம்​.பி. ஜெகத்​ரட்​சக​னின் மகன், அதி​முக முன்​னாள் அமைச்​சர் வைகைச் செல்​வன் உள்​ளிட்ட பலர் தவெக​வில் நேற்று இணைந்​தனர். அப்​போது, உங்​களது உழைப்​பை​யும், விசு​வாசத்​தை​யும் நமது கட்​சி​யிலும் காட்ட வேண்​டும் என முதல்​வர் விஜய் அறி​வுறுத்​தி​னார்.

தமிழகத்​தில் விஜய் தலை​மையி​லான தவெக ஆட்சி அமைந்​ததைத் தொடர்ந்​து, மாற்​றுக் கட்​சிகளைச் சேர்ந்த முன்​னாள் அமைச்​சர்​கள், எம்​எல்​ஏ-க்​கள் மற்​றும் முக்​கிய நிர்​வாகி​கள் அக்​கட்​சி​யில் இணைந்து வரு​கின்​றனர். தொடர்ந்​து, ஒவ்​வொரு சனிக்​கிழமை​யும் பனையூரில் உள்ள கட்​சித் தலைமை அலு​வல​கத்​தில் மாற்​றுக்​கட்​சி​யினர் இணைப்பு விழா நடத்​தப்​பட்டு வரு​கிறது.

இந்​நிலை​யில், நேற்று நடை​பெற்ற இணைப்பு விழா​வில் பல முக்​கியப் புள்​ளி​கள் தவெக​வில் இணைந்​தனர்.திமுக​வின் முக்​கிய முக​மாக அறியப்​படும் அரக்​கோணம் எம்​.பி. ஜெகத்​ரட்​சக​னின் மகன் சந்​தீப் ஆனந்த் தவெக​வில் இணைந்​தது திமுக வட்​டாரத்​தில் பெரும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

அதி​முக முன்​னாள் அமைச்​சர் வைகைச் செல்​வன், முன்​னாள் எம்​எல்ஏ கலை​ராஜன், தமிழ்​நாடு காங்​கிரஸ் விவ​சாய பிரிவு மாநில பொதுச்​செய​லா​ளர் ஆர்​.எஸ்​.​ராஜன், பெங்களூரு வா.புகழேந்தி ஆகியோர் இணைந்​தனர். இதே​போல் நடிகர்​கள் ரவி மரி​யா, பஷீர், அதி​முக கவுன்​சிலர் கே.பி.கே.சதீஷ் உள்​ளிட்ட ஏராள​மான மாற்றுக் கட்சி நிர்​வாகி​கள் தங்​களை தவெக​வில் இணைத்​துக் கொண்​டனர்.

இணைப்பு விழா நடந்து கொண்​டிருந்​த​போது, மாலை 4 மணி​யள​வில், முதல்​வர் விஜய் பனையூர் அலு​வல​கத்​துக்கு வருகை தந்​தார். அங்கு ஏற்​கெனவே, விஜய்​யின் வரு​கைக்​காக காத்​திருந்த, தவெக​வில் இணைந்த முன்​னாள் அமைச்​சர்​கள் சி.​விஜய​பாஸ்​கர், எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர், கடம்​பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், எம்​.சி. சம்​பத் உள்​ளிட்​டோரைத் தனித்​தனி​யாகச் சந்​தித்​துப் பேசி​னார். பின்​னர் அவர்​களு​டன் குழு புகைப்​படம் எடுத்​துக் கொண்​டார்.

அப்​போது, விஜய் பேசி​ய​தாவது: நீங்​கள் என் மீது நம்​பிக்கை வைத்து இணைந்​துள்​ளீர்​கள். உங்​கள் உழைப்பை நான் அறிவேன். அதே உழைப்​பை​யும் விசு​வாசத்​தை​யும் நமது கட்​சி​யிலும் காட்ட வேண்​டும். மக்​கள் பணி மட்​டுமே நமக்கு முக்​கி​யம். அதற்கு நீங்​கள் அனை​வரும் முழு ஒத்​துழைப்பு தர வேண்​டும். உங்​களின் உத்​வேக​மான செயல்​பாடு​கள் தொடரட்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

நிகழ்ச்​சிக்​குப் பிறகு செய்​தி​யாளர்​களிடம் வைகை செல்​வன் கூறுகை​யில், ‘எம்​ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரைப் போலத் தமிழகத்​துக்கு ஒரு தகு​தி​யான தலை​வ​ராக விஜய் கிடைத்​துள்​ளார். அதி​முக தற்​போது தவறான தலை​மை​யிடம் சிக்​கி​யுள்​ளது. அந்த மனவேதனை​யால்​தான் அங்​கிருந்து வில​கினோம். தமிழகத்​தின் அடுத்த 50 ஆண்டு காலத் தேவை அவர்​தான்,’ என்​றார். அதே​போல், இனி வரும் அனைத்​துத் தேர்​தல்​களி​லும் தவெக பெரும் வெற்றி பெறும் என முன்​னாள் அமைச்​சர் சி.​விஜய​பாஸ்​கர் நம்​பிக்கை தெரிவித்​தார்.

<div class="paragraphs"><p>முதல்வர் விஜய்</p></div>
டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு நோட்டீஸ்: சினிமா, ஓடிடி பைரசிக்கு முற்றுப்புள்ளி வைக்க உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in