நாடே வியக்கும் வகையில் தவெக சின்னம் இருக்கும்: செங்கோட்டையன் தகவல்

நாடே வியக்கும் வகையில் தவெக சின்னம் இருக்கும்: செங்கோட்டையன் தகவல்
Updated on
1 min read

ஈரோடு: ‘நாடே வியக்​கும் வகை​யில் தவெக சின்​னம் இருக்கும்’ என அக்​கட்​சி​யின் நிர்​வாகக்​குழு தலைமை ஒருங்​கிணைப்​பாளர் செங்​கோட்​டையன் தெரி​வித்​தார்.

தவெக​வில் இணைந்​துள்ள முன்​னாள் அமைச்​சர் செங்​கோட்​டையன், ஈரோடு மாவட்​டம் நம்​பியூர் எம்​ஜிஆர். நகர் பகு​தி​யில் வசிக்​கும் மக்​களை நேற்று சந்​தித்​தார்.

விஜய் முதல்வராவது உறுதி: அப்​போது அவர் பேசும் போது, “இங்கு இருக்கும் குழந்​தைகளைக் கேட்டால்​கூட, அவர்​கள் விஜய்க்​குதான் வாக்​களிப்​போம் என்​கிறார்​கள்.

மக்​கள் சக்​தி​யாக உரு​வெடுத்து வரும் விஜய், 2026-ல் தமிழக முதல்​வ​ராக அமர்​வது உறு​தி. தமிழகத்​தில் மாற்று அரசி​யல் சக்​தியை உரு​வாக்க விஜய் புறப்​பட்​டிருக்​கிறார். தவெக​வுக்கு விரை​வில் சின்​னம் கிடைக்​கப் போகிறது. அந்த சின்​னத்​தைப் பார்த்து நாடே வியக்​கப் போகிறது” என்​றார். நிகழ்​வில், முன்​னாள் எம்​.பி. சத்​தி​ய​பாமா உள்பட தவெக​வினர் பலர் கலந்து கொண்​டனர்.

நிர்​வாகி​களு​டன் ஆலோ​சனை: தவெக தலை​வர் விஜய், ஈரோடு மாவட்​டத்​தில் டிச.16-ம் தேதி பங்​கேற்​கும் பொதுக்​கூட்​டத்​துக்கு அனு​மதி கேட்ட பவளத்​தான்​பாளை​யம் அருகே உள்ள தனி​யார் இடத்தை மாவட்ட எஸ்​.பி. சுஜாதா ஆய்வு செய்​தார்.

பின்​னர், அந்த இடம் குறுகிய​தாக, போதிய வசதி​கள் இல்​லாமல் இருப்​ப​தால், மாற்று இடத்தை தேர்வு செய்​யும்​படி தவெக​வினரை அவர் அறி​வுறுத்​தி​ய​தாகத் தெரி​கிறது.

இந்​நிலை​யில், விஜயமங்​கலம் சுங்​க​ச்சாவடி அருகே 16 ஏக்​கர் நிலம் மற்​றும் அதன் அருகே மற்​றோர் இடம் என 2 இடங்​களை பார்​வை​யிட்​டதுடன் அதுகுறித்து தவெக நிர்​வாகி​களிடம் செங்​கோட்​டையன் ஆலோ​சனை நடத்தி வரு​வ​தாகக் கூறப்​படுகிறது.

நாடே வியக்கும் வகையில் தவெக சின்னம் இருக்கும்: செங்கோட்டையன் தகவல்
ஏலக்காய் விற்பனையில் பல கோடி முறைகேடு: அமலாக்கத் துறை முன்பு போடி திமுக பிரமுகர் ஆஜர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in