மீனவர் கைது தொடர்ந்தால் கடும் விளைவை சந்திக்க நேரிடும்: மத்திய அரசுக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை

மீனவர் கைது தொடர்ந்தால் கடும் விளைவை சந்திக்க நேரிடும்: மத்திய அரசுக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை
Updated on
1 min read

சென்னை: தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை நேற்று வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: ராமேசுவரம் பாம்​பன் பகு​தியை சேர்ந்த 12 மீனவர்கள் கைது செய்​யப்​பட்​டதுடன், நவீன மீன்​பிடி படகு​களும் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளன. கடந்த வாரம் 22 மீனவர்கள் கைது செய்​யப்​பட்​டதுடன், 4 மீன்​பிடிப் படகு​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன.

கச்​சத்​தீ​வில் உள்ள புனித அந்​தோணி​யார் தேவால​யத்​தில் இன்​னும் சில நாட்​களில் விழா நடை​பெறும் சூழலில், இத்​தகைய கைது நடவடிக்​கைகள் இரு நாட்டு மக்​களிடையே நல்​லிணக்​கத்தை சீர்​குலைத்​திருக்​கிறது.

தற்​போது தமிழகத்தை சேர்ந்த 116 மீனவர்கள் இலங்கை சிறை​களில் அடைபட்​டுள்​ளனர். 259 மீன்​பிடிப் படகு​கள் இலங்​கை​யில் உள்​ளன. இதுதொடர்​பாக தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், இந்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சர் ஜெய்​சங்​கருக்கு பலமுறை கடிதம் எழு​தி​யும், கைது செய்​யப்​பட்ட மீனவர்களும், பறி​முதல் செய்​யப்​பட்ட படகு​களும் இது​வரை விடுவிக்​கப்​பட​வில்​லை.

ஆனால், மீனவர்​கள் கைது செய்​யப்​படு​வதும், படகு​கள் பறி​முதல் செய்​யப்​படு​வதும் தொடர் கதை​யாகி​விட்​டது. மத்​திய பாஜக அரசின் வெளி​யுறவுத் துறை தமிழக மீனவர் பிரச்​சனை​யில் அலட்​சி​யப் போக்​குடன் செயல்​படு​கிறது.

கைது செய்​யப்​பட்ட மீனவர்களையும், பறி​முதல் செய்​யப்பட படகு​களை​யும் உடனடி​யாக விடுவிக்க மத்​திய அரசு நடவடிக்கை எடுக்​க​வில்லை எனில் கடும் விளைவு​களை சந்​திக்க நேரிடும். இவ்​வாறு அறிக்​கை​யில் அவர் தெரி​வித்​துள்​ளார்​.

மீனவர் கைது தொடர்ந்தால் கடும் விளைவை சந்திக்க நேரிடும்: மத்திய அரசுக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை
எண்ணூரில் மக்களின் வசதிகளுக்காக ரூ.10 கோடியில் பேருந்து நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம், நவீன நூலகம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in