சமமற்ற நன்கொடையால் பாஜக வென்றது: செல்வப்பெருந்தகை கருத்து

சமமற்ற நன்கொடையால் பாஜக வென்றது: செல்வப்பெருந்தகை கருத்து
Updated on
1 min read

சென்னை: தமிழ்​நாடு காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை வெளி​யிட்ட அறிக்​கையில் கூறியிருப்பதாவது: உச்ச நீதி​மன்​றம் தேர்​தல் பத்​திர நன்​கொடையை ரத்து செய்த நிலை​யில், அறக்​கட்​டளை​கள் மூல​மாக பாஜக 2024-25 ஆண்​டில் மட்​டும் ரூ.3,112 கோடி நிதி பெற்​றுள்​ளது.

இது மொத்த நன்​கொடை​யில் 85 சதவீத​மாகும். அதி​காரத்தை பயன்​படுத்தி கார்ப்​பரேட் நிறு​வனங்​களுக்கு பல்​வேறு சலுகைகள் வழங்​கியதற்கு கைமாறாக பாஜக நன்​கொடையை பெற்​றிருக்​கிறது.

இத்​தகைய சமநிலைத் தன்​மையற்ற நன்​கொடை குவிப்பு காரண​மாகவே பாஜக 2024 தேர்​தலில் வெற்றி பெற்​றது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்​டத்தின் புதிய சட்​டத்தை திரும்​பப்பெறக்​கோரி தமிழகம் முழு​வதும் திமுக கூட்​ட​ணிக்கட்​சிகள் பங்​கேற்​கும் கண்டன ஆர்ப்​பாட்​டம் நாளை நடை​பெறுகிறது. சென்னை ஆர்ப்​பாட்​டத்​தில் முன்​னாள் மாநில தலை​வர் கே.​வீ.தங்​க​பாலு பங்​கேற்கிறார். இவ்​வாறு கூறப்பட்டுள்ளது.

சமமற்ற நன்கொடையால் பாஜக வென்றது: செல்வப்பெருந்தகை கருத்து
​மாநகராட்சி சார்பில் மெரினாவில் ரூ.86 லட்சத்தில் வீடற்றோருக்கான காப்பகம்: உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in