தமிழுக்கான உண்மையான மரியாதையை நிதி, வளர்ச்சி திட்டத்தில் பிரதமர் மோடி காட்ட வேண்டும்: செல்வப்பெருந்தகை

தமிழுக்கான உண்மையான மரியாதையை நிதி, வளர்ச்சி திட்டத்தில் பிரதமர் மோடி காட்ட வேண்டும்: செல்வப்பெருந்தகை
Updated on
1 min read

சென்னை: தமிழுக்​கான உண்​மை​யான மரி​யாதையை நிதி ஒதுக்​கீடு, பாது​காப்​பு, வளர்ச்சி திட்​டங்​களில் பிரதமர் மோடி காட்ட வேண்​டும் என்று தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் தனது எக்ஸ் தள பக்​கத்​தில் பதி​விட்​டிருப்​ப​தாவது: மான் கீ பாத் நிகழ்ச்​சி​யில் பிரதமர் மோடி தமிழை உயர்த்​திப் பேசி​யது நமக்​கும் பெரு​மை. ஆனால், சொல்​லில் பாராட்​டி​யும் செயல்​களில் புறக்​கணிக்​கும் நிலைமை குறித்து மக்​கள் உண்மை அறிய வேண்​டியது அவசி​யம்.

கடந்த 11 ஆண்​டு​களில் மத்​திய அரசு சம்​ஸ்​கிருதமொழிக்​காக மட்​டும் ரூ.2532.59 கோடி செல​விட்​டிருக்​கிறது. ஆனால் தமிழ், தெலுங்​கு, கன்னடம், மலை​யாளம், ஒடியா போன்ற 5 பாரம்​பரிய மொழிகளுக்​கான மொத்​தச் செலவு வெறும் ரூ.147.56 கோடி மட்டுமே.

தமிழுக்​கான உண்​மை​யான மரி​யாதை நிதி​யிலும், பாது​காப்​பிலும், வளர்ச்​சித் திட்​டங்​களி​லும் காட்​டப்பட வேண்​டும். பாரம்​பரிய மொழிகள்அனைத்​துக்கும் சமமான மரி​யாதை​யும் நிதி​யும் வழங்​கப்பட வேண்​டும். இவ்​வாறு பதி​விட்​டுள்​ளார்​.

தமிழுக்கான உண்மையான மரியாதையை நிதி, வளர்ச்சி திட்டத்தில் பிரதமர் மோடி காட்ட வேண்டும்: செல்வப்பெருந்தகை
கனமழையால் 20 ஆயிரம் ஹெக்டர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன: துணை முதல்வர் உதயநிதி தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in